இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தனது வெளிவிவகார கொள்கையின் முன்னுரிமைக்குரிய விடயமாக அமெரிக்கா மனித உரிமையை முன்னிறுத்தவேண்டும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
2009 ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
2015 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்திற்கான கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதிலும் அமெரிக்க முக்கிய பங்களிப்பை வழங்கியது என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை விலகிய பின்னர் இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் முக்கிய மன்றத்தில் பங்களிப்பு செய்வதை அமெரிக்கா கைவிட்டுள்ளது.
சீனா ஆசிய பிராந்தியத்தில் காலடி எடுத்துவைப்பது குறித்து மூலோபாய கரிசனை கொண்டுள்ள அமெரிக்கா மனித உரிமைகள் நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை ஊக்குவிப்பது பிராந்தியத்தில் ஜனநாயக நாடுகள் பலமடைவதற்கு அவசியம் என்பதை அமெரிக்கா உணரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா தனது வெளிவிவகார கொள்கையின் முன்னுரிமைக்குரிய விடயமாக மனித உரிமையை முன்னிறுத்தவேண்டும் எனவும் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM