தேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய  விசாரணை

Published By: Priyatharshan

15 Nov, 2019 | 05:35 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள  பிரதான வாக்கெண்ணும்  நிலையத்தின் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அரச ஊழியர்கள் 51 பேர் உணவு விஷமானதால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்து ஏற்பட்ட நிலைமையின் பின்னர் குறித்த 51 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 4 சிவில் பாதுகாப்பு படையினரும்  உள்ளடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.

 இந் நிலையில்  இந்த உணவு விஷமான விவகாரம் சதி நடவடிக்கையா அல்லது அதற்கான வேறு காரணிகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விஷேட விசாரணைகளின் பொறுப்பு சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

 குறித்த காலை உணவு பொரளை பகுதியில் உள்ள உனவகம் ஒன்றிலிருந்தே விநியோகிக்கப்பட்டுள்ளதாக சி.சி.டி.யின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில், அந்த உணவு மாதிரிகளை விஷேட பரிசோதனைகளுக்குட்படுத்தவும், வேறு  சாட்சிகளை தேடியும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 இந் நிலையில் உணவு விஷமானதால்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15