(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான வாக்கெண்ணும் நிலையத்தின் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அரச ஊழியர்கள் 51 பேர் உணவு விஷமானதால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்து ஏற்பட்ட நிலைமையின் பின்னர் குறித்த 51 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 4 சிவில் பாதுகாப்பு படையினரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.
இந் நிலையில் இந்த உணவு விஷமான விவகாரம் சதி நடவடிக்கையா அல்லது அதற்கான வேறு காரணிகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விஷேட விசாரணைகளின் பொறுப்பு சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலை உணவு பொரளை பகுதியில் உள்ள உனவகம் ஒன்றிலிருந்தே விநியோகிக்கப்பட்டுள்ளதாக சி.சி.டி.யின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில், அந்த உணவு மாதிரிகளை விஷேட பரிசோதனைகளுக்குட்படுத்தவும், வேறு சாட்சிகளை தேடியும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் உணவு விஷமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM