(செ.தேன்மொழி)
நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் கோதுமை மாவிற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் இவ்வாறு அதிகவிலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்குமாறும் நுகர்வோர் அதிகாரசபையிடம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் அனுமதியின்றி மீண்டும் கோதுமை மாவின் விலையை 8 ரூபாவால் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மிக சூட்சுமமான முறையில் இவர்கள் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதால் தற்போது கோதுமை மாவுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோதுமை மா விநியோகஸ்தர்களின் கணணி தொழிநுட்பமும் முடக்கப்பட்டுள்ளதால் வர்த்தகர்களுக்கு அவர்களை தொடர்பு கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக எமக்கு தெரியவந்துள்ளது.
அதேவேளை கோதுமை மா ஒரு கிலோவின் விற்பனை விலை 87 ரூபாவாகவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதனைவிட அதிகமான விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாம் நுகர்வோர் அதிகார சபையிடம் கேட்டுக்கொள்கின்றாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM