கடந்த முறை தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் பாரிய வன்முறைகள் இல்லை -  பெப்ரல் அமைப்பு 

14 Nov, 2019 | 05:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை நடைபெறவுள்ள தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் குறைவாகவே பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது 4 கொலை சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. 

எனினும் இம்முறை அவ்வாறு கொலை சம்பவங்களோ அல்லது பாரிய வன்முறைகளோ பதிவாகவில்லை என்றும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொலை, கூரிய ஆயுதத்தில் தாக்கி காயப்படுத்தல், தாக்குதல், கடத்தல், குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல், சொத்துக்களை சேதப்படுத்தல் மற்றும் அரசியல் கட்சி காரியாலயங்களை சேதப்படுத்தல் போன்ற பாரிய வன்முறை சம்பவங்கள் இம்முறை குறைவடைந்துள்ளன. 

மேற்கூறிய குற்றங்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 502 உம், 2015 ஆம் ஆண்டு 190 உம், இவ்வருடம் 68 உம் பதிவாகியுள்ளன. 

இது தொடர்பாக பெப்ரல் அமைப்பினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36