கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மரம் கட்டத்தல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கிளிநொச்சியின் காடுகளில் பெறுமதிமிக்க மரங்களை சட்டவிரோதமாக வெட்டி அவற்றை மிகவும் நாசுக்காக வாகனங்களில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நகரங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர் எனவும் இவற்றை சில தரப்புக்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சியின் காடுகளில் உள்ள பெறுமதிமிக்க பாலை,முதிரை மரங்கள் இவ்வாறு வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது.கடந்த வாரம் மாத்திரம் 15 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியான சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சியின் மேற்கு பிரதேசங்களான அக்கராயன், ஜெயபுரம், முட்கொம்பன், பூநகரி, வன்னேரிக்குளம் போன்ற பிரதேசங்களின் காடுகளில் அதிகளவான சட்டவிரோத மரங்கள் வெட்டப்படுகின்றன. எனவும் பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத மரக் கடத்தல்களி்ல் ஈடுப்பட்டு பிடிபடுகின்றவர்கள் பொலிஸாரினால் நீதி மன்ற நடடிவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்ற போது அவர்கள் தண்டனையை பெற்றோ அல்லது தண்டப்பணத்தை செலுத்திய பின்னர் மீண்டும் அதே தொழில் ஈடுபடுகின்ற நிலைமையே காணப்படுகிறது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM