ஜுன் 8 இல் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதம்  

27 May, 2016 | 07:04 PM
image

AJ Pradhap

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் ஜுன்  8 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென  பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதம் சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில்  ஜுன் 8 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6.30 மணிவரையில் இடம்பெறுவதுடன் இது தொடர்பான வாக்கெடுப்பு பிற்பகல் 6.30 இற்கு  இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை  ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின்  37 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு  மார்ச் மாதம் 24 ஆம் திகதி  சபாநாயகரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01