இத்தாலியின் வெனிஸ் நகரை கடந்த 50 வருட காலத்தில் இல்லாதவாறு மிகவும் உயரமான கடல் அலை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கியுள்ளது.
இதனால் அந்நகரின் பல பகுதிகள் கடல் நீரில் மூழ்கியதால் இயல்பு வாழ்க்கை பாதி க்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது நகரில் சில பிராந்தியங்களில் சுமார் 6 அடி (1.87 மீற்றர்) உயரத்துக்கு கடல் அலை பிரவேசித்துள்ளது.
இந்த வெள்ள அனர்த்தத்திற்கு காலநிலை மாற்றமே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேற்படி வெள்ள அனர்த்தத்தையடுத்து வெனிஸ் நகர மேயர் லுயிகி புறுக்னரோ அவசரகால நிலைமையொன்றைப் பிரகடனப்படுத்தியுள்ளார். 78 வயது நபரொ ருவர் தனது வீட்டுக்குள் பிரவேசித்த கடல் நீரால் மின்சாரத்தால் தாக்குண்டு உயிரிழந்துள்ளார். 1966 ஆம் ஆண்டில் தாக்கிய 1.94 மீற்றர் உயர கடல் அலையே இதற்கு முன் னர் வெனிஸ் நகரை தாக்கிய உயரமான கடல் அலையாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM