ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டே குறித்த இரு நாட்களும் நாடு பூராகவும் உள்ள சகல மதுபான நிலையங்களையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
கட்சிகளின் ஆதரவாளர்கள் சிலவேளைகளில் குழப்ப நிலைமைகள் ஏற்படலாம் என்பதையும் அதேபோல் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கக்கூடாது என்ற காரணிகளை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் சகல மதுபான சாலைகளையும் மூட இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அதேபோல் தற்போது பிரகடனப்படுத்தியுள்ள தேர்தல் அமைதி காலத்தினுள் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகரவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM