மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையை விரும்பி அந்தக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கும் மக்கள், சஜித் பிரேமதாசவுக்கு விருப்பு வாக்கை அளிக்கலாம். காரணம் மக்கள் விடுதலை முன்னணியினதும் எமதும் பொருளாதார கொள்கைகள் கிட்டத்தட்ட ஒருமித்ததாகவே உள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு,
உங்கள் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பு எவ்வாறுள்ளது?
பதில்: எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நாடு முழுவதும் பாரிய பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நாங்கள் வீடு வீடாக சென்று மக்களை தெளிவுபடுத்தினோம். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரப் பணிகளில் ஈடுபட்டார். மக்களை சிறந்த முறையில் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களும் சிறந்த முறையில் தெளிவடைந்துள்ளனர்.
எனவே மிகவும் வெற்றிகரமான பிரசாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. நாங்கள் சிறந்த முறையில் பிரசாரப் பணிகளை முன்னெடுத்தோம்.
அந்த வகையில் சஜித் பிரேமதாச, இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சிறப்பான வெற்றியை பெறுவார். அவரின் வெற்றி உறுதியாகியுள்ளது.
வேட்பாளர் சஜித் பிரேமதாச நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பிரசார கூட்டங்களை நடத்தி மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அந்த முயற்சி வெற்றியடைந்திருக்கின்றது. மக்கள் தெளிவடைந்திருக்கின்றார்கள்.
அதனடிப்படையில் 16 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் சஜித் பிரேமதாசவை சிறந்த முறையில் வெற்றியடைய செய்வார்கள்.
வடக்கு கிழக்கில் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு எவ்வாறுள்ளது?
பதில்: வடக்கு கிழக்கு மக்கள் எப்படியும் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குத்தான் வாக்களிப்பார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. வடக்கு கிழக்கு மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க தீர்மானித்துவிட்டார்கள். எந்தவகையிலும் அந்த மக்கள் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கோத்தபாய ராஜபக் ஷவுக்கு வாக்களித்து கஷ்டத்தில் விழுவதற்கு வடக்கு கிழக்கு மக்கள் தயாரில்லை. எனவே வடக்கு கிழக்கு பகுதிகளில் சஜித் பிரேமதாச, அதிகளவிலான வாக்குகளை பெற்று வெற்றியீட்டுவார். காரணம் இந்த நாட்டில் அனைத்து இன மக்களையும் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அந்த விடயம் வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே வடக்கு கிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு அமோக ஆதரவை வெளிப்படுத்துவது நிச்சயமாகும்.
வடக்கு கிழக்கிலும் சிறந்த முறையில் பிரசாரக்கூட்டங்களை நடத்தி மக்களுக்கு நாங்கள் உரையாற்றியிருக்கின்றோம். மக்கள் சஜித் பிரேமதாசவை நன்கு அறிந்திருக்கின்றனர். எனவே சஜித் பிரேமதாச வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் வெற்றியீட்டுவார்.
ஒரு அரசியல் தலைவராக சஜித் பிரேமதாசவிடம் நீங்கள் காணும் விசேட அடையாளம் என்ன?
பதில்: பல விடயங்கள் உள்ளன. முதலாவதாக சஜித் பிரேமதாசவின் அர்ப்பணிப்பை கூறலாம். பாரிய அர்ப்பணிப்புடன் அவர் செயற்பட்டு வருகின்றார். தலைவருக்கு மிக முக்கியமான ஒன்றாக அது காணப்படுகின்றது. இரண்டாவதாக அவரிடம் நேர்மை இருக்கின்றது. அவரின் நேர்மைத்தன்மையும் முக்கியமானது. அரசியல் தலைவர்கள் எப்போதும் நேர்மையானவர்களாக இருக்கவேண்டும். அது சஜித் பிரேமதாசவிடம் இருக்கின்றது. மூன்றாவதாக அவரின் கொள்கைகள், திட்டங்களை குறிப்பிடலாம். பொது மக்கள் குறித்து சிந்திக்கும் மக்களை பலப்படுத்த முயற்சிக்கும் நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்கும் அவரின் திட்டங்கள், கொள்கைகள் மிகவும் முக்கியமானவையாகும். குறிப்பாக வறுமையில் உள்ள மக்களை மீட்டெடுத்து அவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் திட்டங்கள் சஜித்திடம் உள்ளன.
மிக முக்கியமாக மக்களின் கஷ்டங்களை அவர்களின் தேவைகளை அறிந்தவராக எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச காணப்படுகின்றார். அவ்வாறான ஒரு தலைவர் நாட்டை ஆள்வது சிறந்ததாக இருக்கும். பொது மக்களின் நெருங்கியவராக சஜித் பிரேமதாச இருக்கின்றார்.
சஜித் வென்றால் அவரின் அரசாங்கத்தில் முதன்மைப்படுத்தப்படும் விடயங்கள் என்ன?
பதில்: அதிக விடயங்கள் உள்ளன. எனினும், பிரதானமாக நாட்டில் காணப்படும் ஊழல் ஒழிக்கப்படும். மக்களின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும். ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்படும். வறுமைஒழிப்பு, அபிவிருத்தி என பல விடயங்கள் உள்ளன.
மக்கள் சுதந்திரமாக வாழும் நிலைமை உறுதிப்படுத்தப்படும். குறிப்பாக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு பல வேலைத்திட்டங்களை முதன்மை அடிப்படையில் சஜித் பிரேமதாசவின் அரசாங்கம் முன்னெடுக்கும்.
நாட்டின் 70 வருடகால தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண சஜித் என்ன செய்வார்?
பதில்: சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தை வெ ளியிட்டுள்ளார். அந்த தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு அமைவாக அவர் இந்த விடயத்தை அணுகுவார். அதாவது, இந்த விடயம் எவ்வாறு தீர்க்கப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த வகையில் இந்த பிரச்சினை அணுகப்படும். அதனை சஜித் பிரேமதாச சரியாக முன்னெடுப்பார்.
சஜித் வென்றதும் பிரதமர் பதவியில் மாற்றம் வருமா?
பதில்: அது தொடர்பில் என்னால் எதுவும் கூற முடியாது. ஆனால் அரசியலமைப்புக்கு ஏற்றவாறு அந்த நடவடிக்கை எடுக்கப்படும். சஜித் பிரேமதாச அது தொடர்பில் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த விடயம் தெளிவானது. அதாவது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலமுள்ள ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார்.
சந்திரிகா பண்டாரநாயக்க உங்கள் தரப்புக்கு ஆதரவளிப்பது தொடர்பில்?
பதில்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எங்கள் வேட்பாளருக்கு ஆதரவளிப்பது மிக முக்கியமானதாகும். அவருக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். அந்த ஆதரவு தற்போது எமது வேட்பாளருக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. சந்திரிகா குமாரதுங்க எமக்கு ஆதரவு வழங்க முன்வந்தமை தீர்க்கமான ஒரு விடயமாகும்.
இம்முறை தனித்து போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் நிலை எவ்வாறுள்ளது?
பதில்: மக்கள் விடுதலை முன்னணி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றது. அந்த கட்சிக்கும் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவு ஆதரவு உள்ளது. அவர்களும் மக்களை கவர்ந்து வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு தொகை வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கும். ஆனால் இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும்.
அதாவது மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையை விரும்பி அந்தக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கும் மக்கள், சஜித் பிரேமதாசவுக்கு விருப்பு வாக்கை அளிக்கலாம். காரணம் மக்கள் விடுதலை முன்னணியினதும் எமதும் பொருளாதார கொள்கைகள் கிட்டத்தட்ட ஒருமித்ததாகவே உள்ளன. எனவே அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களிக்கும் மக்கள் அதில் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு விருப்பு வாக்கை அளிக்கலாம். அந்த மக்கள் அவ்வாறு செய்வார்கள் என்று நம்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM