ஜனாதிபதித் தேர்தல் - 2019 ; நடைபெறக்கூடியது என்ன ?

13 Nov, 2019 | 01:21 PM
image

ஜனாதிபதித் தேர்தல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திக­தி­யன்று நடை­பெற்று ஓரிரு நாட்­களில் புதிய ஜனாதிப­தியும் தெரிவு செய்­யப்­பட்­டு­வி­டுவார். யார் புதிய ஜனாதிப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என்ற ஏக்­கத்­திலும் ஊகத்­திலும் மக்கள் உள்­ளனர். அதற்கு காரணம் 35 அபேட்­ச­கர்கள் போட்­டி­யி­டு­வ­தல்ல வேறு கார­ணங்­க­ளாகும். எனினும் பெரும்­பா­லான மக்கள் ஜனாதிபதித் தேர்­தலில் டம்மி அபேட்­ச­கர்­களும் அர­சி­ய­லையே பொழு­து­போக்­காக கொண்ட ஜோக்­கர்­களும் போட்­டி­யி­டு­வதால் அவர்­களில் யார் வெற்றி பெறுவர் என்­பதை தீர்­மா­னிப்­பதில் சங்­க­டப்­ப­டாமல் நிச்­ச­ய­மாக சஜித், கோத்­தபாய, அநுர குமார திசா­நா­யக்க ஆகிய இவர்­களில் ஒரு­வரே ஜனாதிப­தி­யாக வருவார் என்­பதை உணர்ந்தும் உள்­ளனர் என்­ப­தையும் நாம் அவர்­களின் செய­லிலும் பேச்­சுக்­க­ளிலும் இருந்து காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது.

அவர்­களின் கணிப்­பின்­படி மேலே நான் கூறிய அபேட்­ச­கர்­களில் ஒரு­வரே ஜனாதிப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என்றும் ஆயினும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிடும் அபேட்­சகர் அநுர குமார திசா­நா­யக்க   பலத்த போட்­டியை கொடுப்பார் என்­பது உண்­மை­யா­யினும் ஏனைய இரு­வர்­களில் ஒரு­வ­ரான சஜித் பிரே­ம­தாச அல்­லது கோத்­தபாய ராஜபக் ஷ அவர்­களில் ஒரு­வரே வெற்றி பெறுவர் என்றும் பொது மக்­களில் பெரும்­பா­லானோர் கணித்­துள்­ளனர். மேலும் இம்­முறை நடை­பெறும் போட்டி நாட்டின் அபி­வி­ருத்தி சம்­பந்­த­மாக இல்­லாமல் நாட்டின் பாது­காப்பு பற்­றி­ய­தாகவும் இன ஐக்­கி­யத்தை வலி­யு­றுத்தும் போட்­டி­யா­கவும்  காணப்­ப­டு­கி­றது.

நாட்டின் பாது­காப்பு மற்றும் வேறு சில­வற்றை அடிப்­ப­டை­யாக வைத்தும்  பெரும்­பாலும் நடை­பெ­று­வ­தாலும் மேலும் இன ஐக்­கி­யத்தை வைத்தும் நடை­பெறும்  போட்­டி­யா­கவும் காணப்­ப­டு­கி­றது. இதனால் இம்­முறை ஜனாதிபதித் தேர்­தலில் யார் வெற்றி பெறுவர் என்று முன்­கூட்­டியே தீர்­மா­னிப்­பது கஷ்­ட­மா­யினும் ஓர­ளவு  ஊகிக்க கூடி­ய­தான சூழல் தற்­போது காணப்­ப­டு­கி­றது என்று கூறலாம்.

தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் முடிவு

ஏற்­க­னவே  ஊறிப்­போ­யி­ருந்த வகுப்­பு­வாதம் சென்ற ஏப்ரல் மாதம் நடை­பெற்ற கல­வ­ரத்தின் பின்னர் இன மத ரீதி­யான கொள்­கை­யையே சிங்­கள மக்கள் அங்­கீ­க­ரித்­துள்­ளனர் என்­பதை காணக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. அத­னையும் வடக்கு கிழக்கு மாகாண  மக்­களின் அமை­தி­யையும் சாக்­காக வைத்து தென்­னி­லங்­கையில் முக்­கி­ய­மான அர­சியல் கட்­சிகள் இன மத வாதத்தை  முன்­வைத்து சிறு­பான்மை இனங்­க­ளாக தமிழர், முஸ்லிம் இனத்­தவர் மீது வெறுப்­பூட்டும் கொள்­கை­யையே கடைப்­பி­டிப்­ப­தையும் நாம் காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது. சிங்­கள மக்கள் இதனை அங்­கீ­க­ரிப்­ப­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர். இதனால் இக்­கொள்­கையை  அடிப்­ப­டை­யாக கொண்டு இயங்கும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி சிங்­கள மக்கள் மத்­தியில் முன்­னி­லையில் நிற்­கி­றது. விசே­ட­மாக தனிச்­சிங்­கள மக்கள் வாழும் பகு­தியில் அவர்கள் முன்­னி­லையில் நிற்­கின்­றனர் எனலாம்.

இதனால் தென்­னி­லங்­கையில் உள்ள தனிச்­சிங்­கள மக்­களை கொண்­டுள்ள தேர்தல் தொகு­தி­களின் வாக்­குகள் மேற்­படி கட்­சிக்கே செல்ல இட­மி­ருக்­கி­றது என்று கூறலாம்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியை நம்பி அர­சியல் நடத்தும் இட­து­சாரிக் கட்­சி­யினர், ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் சர­ண­டைந்­துள்­ளனர். ஆகவே ஸ்ரீலங்கா பொது ஜன முன்­ன­ணியும் அக்­கட்­சியை நம்பி அர­சியல் நடத்தும் இட­து­சா­ரி­களும் ஸ்ரீலங்கா பொது ஜன முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிடும் ஜனாதிபதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு அளித்து வரு­வதை தென்­னி­லங்­கையில் காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது. இதனால் இட­து­சாரி வாக்­கு­களும் பொது­ஜன முன்­ன­ணிக்கே செல்லும் என எதிர்­பார்க்­கலாம். இன ஐக்­கி­யத்­துக்கு எதி­ரான வாக்­கா­கவே அவை இருக்கும்.

கொழும்பு, நுவ­ரெ­லியா, பதுளை,  கண்டி போன்ற மாவட்­டங்­களின்  முடிவு எப்­ப­டி­யி­ருக்கும்?

சகல இன மக்­களும் இணைந்து வாழும் கொழும்பு, நுவ­ரெ­லியா, பதுளை, கண்டி, மாத்­தளை போன்ற பகு­தி­களில் வாழும் சிறு­பான்மை இனத்­த­வர்கள் (தமிழ் – முஸ்லிம்) தாம் சிங்­கள மக்­க­ளுடன் சக­வாழ்வு வாழலாம் என்ற கொள்­கையை கடைப்­பி­டித்து வாழ்­வதால் அவர்­க­ளது  வாக்­குகள் கட்­டாயம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அபேட்­சகர் சஜித் பிரே­ம­தாசவுக்கே செல்லும் என எதிர்­பாக்­கலாம். ஏனெனில் இன ஐக்­கியம் அக்­கட்­சியின் கருப்­பொ­ரு­ளாக இருக்­கி­றது.

மேலும் ஆர். பிரே­ம­தாசவின் புதல்­வ­ரான சஜித்   ஐக்­கிய தேசியக் கட்­சியின் அங்­கத்­தவர் மட்­டு­மல்ல இந்­திய மக்­களின் நல்­வாழ்­வுக்கு அர­சியல் ரீதியில் வாக்­கு­ரி­மையை பெற்றுக் கொடுத்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெட்­டுப்­புள்­ளியை 5% ஆக குறைத்தும் அம்­மக்­களை ஏனை­ய­வர்­க­ளுக்கு சம­மா­ன­வர்­க­ளாக மாற்­றி­ய­வரின் மக­னுக்கு (சஜித்­துக்கு) நன்றிக் கட­னாக மேற்­படி  இனத்­த­வர்­களின் முழு­வாக்கும் செல்­லக்­கூ­டிய ஒரு நிலையும்  மேற்­படி மாவட்­டங்­களில் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது.

மேலும் தோட்டப் பகு­தி­களில் விசே­ட­மாக நல்ல குடி­யி­ருப்பு வச­தி­க­ளையும் தொழி­லையும் பிற மாவட்­டங்­களில் சென்று கௌர­வ­மான தொழில்­களை புரி­யவும் ஆர்.பிரே­த­மாச அவர்­களும் தற்­போ­தைய அரசும் பெரும்­பங்கு ஆற்­றி­ய­தற்­காக அவ் இனத்­த­வரின் வாக்­குகள் சஜித்துக்கு கிடைக்கக் கூடிய சூழ்­நிலை மேற்­படி மாவட்­டங்­களில் காணப்­ப­டு­கி­றது என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களின் முடிவு எப்­ப­டி­யி­ருக்கும்?

தமி­ழ­ரசுக் கட்­சியின் ஆரம்­ப­கால கொள்­கையை தமிழ் மக்கள் இன்றும் ஏற்­றுள்­ளார்கள் என்று கூறலாம். அதில் எந்த மாற்­றமும் இல்லை. அத்­துடன் ஏனைய தமிழ் கட்­சி­களும் தமிழ் இன நலன் சார்ந்த பொது­வான கொள்­கையை கடைப்­பி­டிப்­ப­தையும் காணலாம். மேலும் சமூ­கத்தின் முது­கெ­லும்­புகள் எனக் கரு­தப்­படும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் மூத்த கட்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தையும் காண­மு­டி­கி­றது. தீவி­ர­மாக வெல்ல வேண்டும் புரட்­சி­கர முறையில் இயங்க வேண்டும் என்ற கொள்­கையை தற்­போது சமூ­கத்தில் காண­மு­டி­யாமல் இருக்­கி­றது. ஒற்­று­மையே பலம் என்­பதை உணர்ந்­துள்­ள­துடன் தமிழர் பிரச்­சி­னையை மெது­வாக ஆனால் உறு­தி­யாக அடைய வேண்டும் என்ற கொள்­கையை சக­லரும் ஏற்றுக் கொண்­டுள்­ளது போல் தெரி­வதை நாம் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. ஆகவே தமி­ழர்­க­ளது வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே பெரும்­பாலும் செல்லும் எனக் கரு­தலாம்.

வட­மா­கா­ணத்தில் தமிழ் மக்கள் வாக்­க­ளிக்க கூடாது என்ற ஒரு நிலைப்­பாட்டில் ஒரு அர­சியற் கட்சி இருப்­ப­தையும் நாம் மறக்­கக்­கூ­டாது. ஆனாலும் அக்­கட்­சியின் கொள்­கையை ஏற்று மக்கள் வாக்­க­ளிக்­காமல் இருப்­பார்கள் என்­பதை காண முடி­யாமல் இருக்­கி­றது. ஈ.பி.டி.பி கட்­சியின் முக்­கி­யஸ்­த­ர்கள் கூட வாக்­க­ளிப்பை புறக்­க­ணிக்க வேண்டும் என்று கூற­வில்லை. ஆகவே வடக்கு மாகா­ணத்தில் தமிழ் பேசும்  மக்­க­ளது வாக்­க­ளிப்பு உச்­ச­மாகக் காணப்­படும். அவ் வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே அளிக்­கப்­ப­டலாம் என ஆய்­வா­ளர்கள் திட­மாக கூறு­கின்­றனர். ஆயின் ஈ.பி.டி.பியின் ஆத­ர­வுக்கும் சில வாக்­குகள் கிடைக்­கலாம்.

கிழக்கு மாகாண நிலை வட மாகா­ணத்தை போன்­ற­தல்ல.  அங்கு முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் கலந்து வாழ்­வதால் தமிழ் சமூ­கத்தின் கட்­டுப்­பாட்டை முஸ்­லிம்கள் ஏற்க வேண்டும் என யாரும் கூறு­வ­தில்லை. அதேபோல் முஸ்­லிம்­களின் தீர்­மா­னத்தை தமி­ழர்கள் ஏற்க வேண்டும் என யாரும் எதிர்­பார்ப்­ப­து­மில்லை. முன்­னைய காலங்­களில் தேர்­தல்­களில் இவ்­விரு சமூ­கத்­த­வரும் தனித்­த­னியே பிரிந்து தமது சமூக நலன்­களை கருத்தில் கொண்டு வாக்­கு­களை அளித்து வந்­ததை நாம் காணலாம்.

இம்­முறை இந்­நிலை கிழக்கு மாகா­ணத்தில் இல்லை. சகல இன மக்­களும் தமிழ் முஸ்­லிம்­களும் சேர்ந்து ஒரு கட்­சிக்கே வாக்­க­ளிக்க இருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஒரு சிலர் மாறு­பட்டு இருப்­பினும் அம்­மா­றுதல் பெரி­தான பாதிப்பு ஒன்றை ஏற்­ப­டுத்­தாது என ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

ஆகவே வட மாகா­ணத்தை போலவே கிழக்கு மாகாண மக்­களும் ஒரு கட்­சிக்கே வாக்­க­ளிக்க இருப்­ப­தாக தெரி­வதால் அவ்­விரு மாவட்­டத்தின் வாக்­கு­களில் மிகப் பெரும்­பான்மை வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே கிடைக்கும் எனவும் ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

ஆகவே புதி­தாக ஆட்சி பீடம் ஏறும் அர­சாங்கம் வடக்கு – கிழக்கு மாகாண மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்க முற்­படும் நட­வ­டிக்­கை­களை எடுக்கும் போது ஈ.பி.டி.பி மற்றும் சில கட்­சிகள் பிரச்­சி­னையை தீர்க்க ஒத்­து­ழைப்பை வழங்கும்  என திட்­ட­வட்­ட­மாக கூறலாம்.

இளை­ஞர்­கள – மிதக்கும் வாக்­குகள் எப்­படி இருக்கும்?

தற்­கால உலகில் இளை­ஞர்­களின் மனோ­நிலை முதி­ய­வர்­களின் மன­நி­லையில் இருந்து மாறு­பட்டு காணப்­ப­டு­வதை நாம் காணலாம்.  இது இலங்­கைக்கும் பொருந்தும் பல்­லின மத கலா­சா­ரங்­களை அடங்­கிய  நாடாக இலங்கை இருந்த போதும் இளை­ஞர்கள் மன­நிலை புதிய உலக படைப்பை உரு­வாக்க வேண்டும் என்­பதில் வேறு­பட்டு காணப்­ப­டு­வ­தில்லை. ஆகவே இளை­ஞர்கள் மற்றும் மிதக்கும் வாக்­கா­ளர்­களின் மன­நிலை நாம் மேலே கூறி­ய­வாறு இன மத நோக்கம்  கொண்­ட­தாக மட்டும் இருக்­கப்­போ­வ­தில்லை. அவர்­க­ளது அறிவு ஞானம், தொழில்­நுட்ப சாத­னங்கள், கருத்­துக்கள் மற்றும் படிப்­ப­றிவு, பேஸ்புக் போன்ற சாத­னங்­களின் கருத்­துக்கள் நிச்­ச­ய­மாக அவர்­க­ளது மனதை பாதித்­தி­ருக்கும் என்­பதை மறக்­கக்­கூ­டாது. அத்­த­கைய நிலையில் உள்ள இளை­ஞர்கள் ஏனைய இன மதத்தை சார்ந்த இளை­ஞர்­களின் உள்­ளத்தை பாதிக்கும் முறையில் நடக்கப் போவ­தில்லை. தற்­போது இலங்­கையில் 640,000 இளை­ஞர்கள் யுவ­திகள் வாக்­கா­ளர்­க­ளாக வாழ்­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. அவர்­க­ளது மன­நி­லையை பற்­றிய கணிப்பில் ஈடு­பட்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளது என்­ன­வெனில் இலங்­கையில் அவர்­க­ளது  வாக்­குகள் தேசத்தில் இன மத ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தப் பாவிக்க இருப்­ப­தா­கவே உள்­ள­தா­கவும் இன ஐக்­கியம் முக்­கி­ய­மா­ன­தாக அவர்கள் மனதில் கொண்­டுள்­ள­தா­கவும் அவர்கள் கொண்­டுள்­ளனர் என்றும் தெரி­வித்­துள்­ளனர். பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக  பேரா­சி­ரியர் ஒருவர் இதனை தெரி­வித்­துள்ளார்.

ஆகவே நடைப் பெறப்­போகும் ஜனாதிபதி தேர்­தலில் தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் முடிவு  ஒரு வித­மான நோக்­கத்தை கொண்டும் வடக்கு – கிழக்கு மாகா­ணத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்­களின் முடிவு சிங்­கள மக்­களின் நோக்­கத்தில் இருந்து வேறு ஒரு­வி­த­மான நோக்­கத்தை கொண்டும் இளை­ஞர்கள் மிதக்கும் வாக்­கா­ளர்­களின் வாக்­குகள் வேறு ஒரு நோக்­கத்தை  கொண்டும்  இருக்கப் போவ­தாலும் அதனை ஊக்­கு­விக்க ஜனாதிபதி அபேட்­ச­கர்கள் மூவர் மக்கள் முன்­னி­லையில் வாக்கு கேட்­ப­தையும் பார்க்கும் போது யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்­கி­றது என்­பதை வாக்­கா­ளர்­களே தீர்­மா­னித்து கொள்­ளலாம்.

தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் எண்­ணத்தை பிர­தி­ப­லிக்க ஜனாதிபதி அபேட்­சகர்  ஒரு­வரும்  இலங்­கையர் என்ற  இன ஐக்­கி­யத்தை வேரூன்றச் செய்ய இன்­னு­மொரு­வரும் இளைஞர் யுவ­தி­களின் “நாம் இலங்­கையர்” என்ற எண்­ணத்தை வளர்க்க இன்­னு­மொ­ரு­வ­ரு­மாக மூன்று அபேட்­ச­கர்கள் தமது பிர­சா­ரங்­களை மேற் கொண்டு வரு­வதை நாம் காணலாம். இதில் யார் வெற்றி பெற இட­மி­ருக்­கி­றது. என்­பதை நீங்­களே தீர்­மா­னித்துக் கொள்­ளலாம்.

உங்­க­ளது தீர்­மானம் எதுவோ அதுவே எனது தீர்­மா­ன­மு­மாக இருக்கும். ஆனால் எனது தீர்­மா­னத்­திற்கு அடிப்­படை இன­வாதம் வேண்டாம் என்றும் இன ஐக்­கி­யமே வேண்டும் என்­பதும் இளைஞர் யுவ­தி­களின் எதிர்­கால வாழ்வு நல­வாக இருக்­க­வேண்டும் என்று நான் கரு­து­வ­தே­யாகும்.

ஜனாதிபதித் தேர்­தலும் கருத்துக் கணிப்­பு­களும்

ஜன­நா­யக நாடு­களில் கருத்துக் கணிப்பு ஒரு முக்­கிய விட­ய­மாக காணப்­ப­டு­கி­றது இதற்கு காரணம் கருத்துக் கணிப்பு ஒரு விஞ்­ஞான ரீதி­யான ஆய்­வாகும். ஆகவே மேலை நாடு­களில் இன ரீதி­யாக மக்கள் பிரிந்து வாக்­க­ளிப்­ப­தில்லை. நாட்டின் நலன் கரு­தியே அவர்கள் வாக்­க­ளிப்­பது உண்டு. கருத்துக் கணிப்­புக்கள் மூலம் வாக்­கா­ளர்­களின் மன­நி­லையை அறிய முடி­கி­றது. வெற்றி பெறு­கின்ற கட்­சிக்கு வாக்­க­ளிக்­க­வேண்டும் என்ற மன­பான்மை மக்­க­ளிடம் காணப்­ப­டு­வது வழக்கம்.

கருத்துக் கணிப்பை நடத்­து­ப­வர்கள் சாதா­ரண பேர் வழிகள் அல்ல. பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள், மாண­வர்கள் மற்றும் அறி­வா­ளிகள் இதனை நடத்­து­கின்­றனர். இதற்கு முதற்­ப­டி­யாக ஒரு வினாக்­கொத்தை தயா­ரித்து அதனை தெரிவு செய்­யப்­பட்ட சில வாக்­கா­ள­ரிடம் கொடுத்து விடையைப் பெற்று இதன் பின்னர் விடையில் இருந்து அவர்கள் கண்ட முடிவை மக்­க­ளுக்கு தெரி­விக்­கின்­றனர்.

கருத்துக் கணிப்பு பெரும்­பாலும் தவ­று­வ­தில்லை. மேற்­கு­லக  நாடுகள் இதில் முன்­னி­லையில் நிற்­கின்­றன அவை வெளியிடும் கருத்துக் கணிப்பு தவ­று­வ­தில்லை.

இந்­தி­யாவில் சமீ­பத்தில் நடந்த லோக் சபா தேர்­தலில் நரேந்­திர மோடியின் தலை­மையில் பார­திய ஜனதா வெற்றி பெற போகி­றது என்­பதை  கருத்துக் கணிப்­புக்கள் எடுத்துக் காட்­டின. தேர்தல் முடிவும் அப்­ப­டியே இருந்­தன. ஆகவே இலங்­கை­யிலும் இந்­நிலை வர­வேண்டும். அமெ­ரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடு­களில் இக்­க­ருத்துக் கணிப்பு நாள்­தோறும் நடை­பெ­று­வதும் உண்டு.

கருத்துக் கணிப்பை வெளி­யி­டு­ப­வர்­களில் பத்­தி­ரி­கைகள் முக்­கிய பங்கு ஆற்­று­கின்­றன. “இந்­தியன் இன்ஸ்­டியூட் ஒப் பப்ளிக் ஒப்­டீ­னியன்” என்ற அமைப்­புதான் முதன்­மு­த­லாக தேர்­த­லுக்கு முன்னர் கருத்துக் கணிப்பை வெளி­யிட்­டது. பின்னர் தொடர்ந்தும் திற­மை­யான கருத்துக் கணிப்பை வெளி­யிட்டு வரு­கின்­றன. கருத்துக் கணிப்பு பிழை­பட்­டாலும் பத்­தி­ரி­கை­களை தாக்கும் செயல்கள், ஆசி­ரி­யர்­களை கொலை செய்தல் போன்ற சம்­ப­வங்கள் நடை­பெ­று­வ­தில்லை. ஆகவே இலங்கைப் பத்­தி­ரி­கைகள் தேர்தல் கணிப்­பு­களை வெளி­யிட தயங்­கு­வதில் ஆச்­ச­ரி­ய­மில்லை.

கருத்துக் கணிப்பில் முக்­கி­ய­மாக ஏற்­படும் பிரச்­சி­னை­களில் ஒன்று நாட்டில் எழும் அபிப்­பி­ரா­யங்கள் எல்லாப் பக்­கங்­க­ளிலும் ஒரே மாதி­ரி­யாக இருப்­ப­தில்லை. வேறு­பட்டு காணப்­படும். உதா­ர­ண­மாக இலங்­கையில் ஜனாதிபதித் தேர்தல் சம்­பந்­த­மாக எல்லாப் பக்­கங்­க­ளிலும் ஒரே மாதி­ரி­யாக இல்லை. உதா­ர­ண­மாக இலங்­கையில் இம்­முறை வடக்கு – கிழக்கு மற்றும் சிறு­பான்மை இன மக்கள் வசிக்­கின்ற மாகா­ணங்­களில் வாழு­கின்ற எண்­ணமும் வேறு தனி இன மக்கள் வாழு­கின்ற எண்­ணமும் வேறு பட்டு காணப்­ப­டு­கி­றது. ஆகவே நாடு முழு­வதும் இந்­நி­லையே காணப்­ப­டு­கி­றது என்று ஒரு­வ­ராலும் கூற முடி­யாது. உண்மை நிலைமை என்ன என்­பதை கூற முடி­யாத ஒரு நழுவல் நிலையே காணப்­ப­டு­கி­றது. இதனால் வாக்­காளர் நன்கு சிந்­தித்து தமக்கு பிடிக்கும் ஒரு­வ­ருக்கு வாக்­க­ளிப்­பதே நல்­லது. அதற்கு வேறு ஒரு­வரின் அறி­வுரை தேவை என நான் நினைக்­க­வில்லை.

தொகுப்புரை

வாக்காளர் என்னிடம் கேட்கும் வினாக்களில் பிரதானமான வினா என்ன வெனில் கட்டாயம் 1, 2, 3 என்ற வாக்குகள் கட்டாயம் எழுத வேண்டுமா என்பது.

விடை இல்லை என்பதாகும்.

நீங்கள் உங்களது வாக்கை மட்டும் [1] பாவித்தால் அது செல்லுபடியாகும். 2, 3 எழுத தேவையில்லை.

இவ்விளக்கம் தேர்தல் ஆணைக்குழுவில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் சிறு பிள்ளைகளும் விளங்கக்கூடிய விதத்தில் பிரசுரமாகியுள்ளது. பார்க்கவும்.

நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கும் Vote உம் இரண்டு சலுகை வாக்குகளும் (Preferential Vote) உம் உண்டு. கட்டாயம் வாக்கை பாவிக்க வேண்டும். சலுகை வாக்குகளை பாவிக்க தேவையில்லை. விரும்பினால் மட்டுமே அவற்றை பாவிக்க வேண்டும்.

கே.ஜீ.ஜோன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04