இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் பெருந்தோட்டங்களை நடத்திச்செல்லமுடியாது என்று முதலாளிமார் சம்மேளனம் கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கூறுகிறார்.
தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்ட ங்களில் இலாபம் கிடைப்பது அந்த பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் உழைப்பு காரணமாகவே.
எனினும் இந்த தொழிலாளர்களுக்கு ஆகக்குறைந்த சம்பளத்தையே நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 1992 இல் செயற்பட்டு வரும் பெருந்தோட்டங்களில் 400 தொழிற்சாலை கள் இருந்தன. எனினும் உரியமுறையில் அந்த பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்படவில்லை. இந்த நிறுவனங்கள் பெருந்தோட்டத் தொழில்துறையை அபிவிருத்தி செய்யவில்லை.
இதன்காரணமாகவே தோட்டங்கள் நட்டங்களை சந்திக்கின்றன. இதற்கு தோட்டத்தொழிலாளர்கள் காரணமில்லை. பெருந்தோட்ட நிறுவனங்களே காரணமாகும். பெருந்தோட்ட நிறுவனங்கள் இலாபத்தை உழைப்பதற்காக பெருந்தோட்டங்களின் மரங்களை வெட்டி விற்பனை செய்தன. எனினும் இன்று இலாபம் இல்லை என்று கூறுகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்ப ளம் அவர்கள் வாழ்க்கை செலவுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்பட வேண்டும். எனினும் பெருந்தோட்டத்துறையின் நிறுவனங்கள் இலாபம் என்ற விடயத்துடன் இணைத்து தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கமுடியாது. இன்று நாட்டில் ஒருநாளைக்கு உணவுக்காக 25,000 ரூபாவை செலவிடும் பிரிவினர் உள்ளனர்.
எனினும் இந்த நாட்டில் நாள் ஒன்றுக்கு தமது உழைப்புக்காக 500 ரூபாவை மாத்திரமே பெறும் பிரிவினர் அதாவது பெருந்தோட்டத்துறையினர் உள்ளனர் என்பது கவலைக்குரியதாகும். இந்தநிலையில் பெருந் தோட்ட மக்கள் வாழ்க்கையை 21 நிறுவனங்களிடம் அடகுவைக்கவேண்டுமா?
தேர்தலின்போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளை தசம் கணக்கில் கணக்கிடுவதில்லை. ஏனைய வாக்காளர்களை போன்றே அவர்களின் வாக்குகளும் எண்ணப்படுகின்றன. தோட்டத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களை ஏனைய மக்களுக்கு சமமானவர்கள் என்ற நிலையில் பார்த்தால் அவர்களின் சம்பளப்பிரச்சினையை இலகுவில் தீர்க்கமுடியும்.
நாட்டின் ஏனைய மக்களை காட்டிலும் பெருந்தோட்ட மக்கள் தாழ்ந்தநிலையிலான வாழ்க்கையையே வாழ்கின்றனர். 150 வருடங்களுக்கு முன்னர் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்தபோது பலர் இடையிலேயே உயிரிழந்தனர். 100 பேர் இலங்கைக்கு கப்பல்களில் வந்தார்கள் என்றால் அவர்கள் மலைநாட்டுக்கு செல்லும்போது 50 பேராகவே சென்றுள்ளனர். பல்வேறு காரணங்களால் இவர்கள் இடையில் மரணத்தை தழுவினர்.
சிறிமா-–சாஸ்திரி உடன்படிக்கையின்போது பெருந்தோட்டத்தொழிலாளர்கள் ஏல விற்பனையின் அடிப்படையில் நடத்தப்பட்டனர். இவ்வளவு தொகையை நீங்கள் வைத்திருந்தால் நாங்கள் இவ்வளவு தொகையை வைத்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையிலேயே சிறிமா-–சாஸ்திரி உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. நாட்டின் வறுமைநிலை 4.1ஆக இருக்கும் போது பெருந்தோட்டத்தொழிலாளர்களின் வறுமை நிலை 8.8ஆக உள்ளது.
இதேவேளை தனிநபர் வருமானம் மாதாந் தம் 16377 ரூபாவாக உள்ளது. எனினும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வருமானம 8566 ரூபாவாக உள்ளது. அரசாங்கத்தின் கணக்கெடுப்பின்படி 4 பேரைக்கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 54,599 ரூபா அவசியமாகும். எனினும் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் வருமானம் இதனை ஈடுசெய்யும் வகையில் இல்லாமல் ஆகக்குறைந்த நிலையிலேயே உள்ளது.
இதனை வைத்து பார்த்தால் அவர்கள் இலங்கை பிரஜைகள் இல்லையா? சுகாதார நிலையை எடுத்துக்கொண்டால் நகரங்களில் 2.5கிலோவுக்கு குறைந்த நிறைகுறைவான குழந்தைகள் 12.7 வீதம் என்ற அளவில் பிறக்கின்றன. கிராமப்பகுதியில் இது 15.7 ஆக இந்த நிலை காணப்படுகிறது. ஆனால் மலையகத்தில் இது 25.6 வீதமாக உள்ளது.
இந்த நிலைமை தொடர்வதன் காரணமாகவே மந்தபோசனை நிலை பெருந்தோட்டங்களை பாதிக்கிறது. பெருந்தோட்டங்களின் கர்ப்பிணித் தாய்மார்களில் மூன்றில் ஒருவருக்கு உரிய இரத்தம் இல்லாமல் உள்ளது.
கல்வித்துறையில் பெருந்தோட்டத்துறை யில் சாதாரண தரத்துக்கு கீழ் கல்வி பயின்றவர்களின் வீதம் 47 ஆக உள்ளது. 8 வீதமானோரே உயர்தரம் கற்கின்றனர். பல்கலைக்கழகங்களுக்கு 2 வீதமானோரே செல்கின்றனர். நாட்டில் உள்ள 14 பல்கலைக்கழகங்களுக்கு 28700 மாணவர்கள் வரை அனுமதி பெறுகின்றபோதும் பெருந்தோட்டங்களின் 150 என்ற அளவிலான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். அதிலும் 20 -பேரே கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறையில் பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்றனர். இரத்தினபுரி மற்றும் பதுளைப் பகுதிகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானப்பாடசாலைகள் இல்லை. இது பாரிய பாதிப்பாகும். இலங்கையில் கணனிகளை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வீதம் 22.8ஆக உள்ளது.
எனினும் பெருந்தோட்டத்துறையில் 4.5 வீதமானோரே கணனிகளை கொண்டுள்ளனர். பெருந்தோட்டத்துறையில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களில் நூற்றுக்கு ஐந்து வீதமானோர் மந்தபோசனைக்கு உட்பட்டுள்ளனர். கட்டுநாயக்கவில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற பெருந்தோட்ட இளைஞர்களுக்கு, யுவதிகளுக்கு கிடைத்துள்ள தங்குமிடங்களை காட்டிலும் குறைந்த அளவைக்கொண்ட வீடுகளே பெருந்தோட்டங்களில் உள்ளன.
இதனை அந்த தொழிற்சாலையில் பணி யாற்றுகின்ற பெருந்தோட்ட இளைஞர்களே தம்மிடம் கூறியதாக அனுரகுமார திஸாநாய க்க குறிப்பிட்டுள்ளார். இன்று பெருந்தோ ட்ட மக்களை பொறுத்தவரையில் சமூக அந்தஸ்து குறைந்தளவிலேயே உள்ளது. வீடுகளில் பணியாற்றுவதற்கும் ஹோட்டல் களில் பணியாற்றுவதற்கும் இன்று பெருந் தோட்டங்களில் உள்ளவர்களே தேடும் நிலை உள்ளது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மதுபான விற்பனைகளில் ஈடுபடுகின்றனர். பெருந் தோட்ட பணியாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவாக இருக்கவேண்டும்.
இதனை தொழிலாளர்களின் பிரதிநிதிகள் வலியுறுத்த வேண்டும்.அத்துடன் அவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அனை த்து உரிமை விடயங்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகள் உரியமுறையில் செயற்பட்டு அந்த மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM