சகல இன மக்களும் நல்லிணக்கத்துடன் சிறந்த முறையில் வாழ்வதற்கான சூழலை மீண்டும் தோற்றுவிப்போம். மக்கள் மத்தியில் காணப்பட்ட ஒருமைப்பாட்டை அரசாங்கம் அரசியல் தேவைகளுக்காக இல்லாதொழித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனைத்து இன மக்களின் ஆதரவும் அவசியம் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மட்டக்களப்பு - சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை கொண்டுள்ளார்கள். இப் பிரதேச மக்கள் பெரிதும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள். விவசாயத்தை பிரதான் ஜீவனோபாயமாக கொண்டுள்ளவர்களுக்கு காட்டு யானைகளின் தாக்குதல் பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுப்படும் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நுண்கடன்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு தீர்வு வழங்கப்பட்டு அவர்கள் சுய கைத்தொழில் ஊடாக முன்னேற்றமடைவதற்கான திட்டங்கள் குறுகிய காலத்திற்குள் செயற்படுத்தப்படும்.
கடந்த அரசாங்கத்தில் இப்பிரதேசத்தில் பல செயற்திட்டங்களின் ஊடாக பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.துரிதகரமான அபிவிருத்தியையும், முன்னேற்றத்தினையும் கருத்திற் கொண்டு 2015ம் ஆண்டு மக்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினார்கள். ஆனால் எவரின் எதிர்பார்ப்பும் ஈடேறவில்லை. கடந்த அரசாங்கத்தின் அபிவிருத்திகள் அரசியல் பழிவாங்களுக்காக முடக்கப்பட்டதே தவிர எவ்வித புதிய அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லை.
அனைத்து இன மக்களும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் சிறந்த முறையில் வாழ்வதற்கான சூழலை எமது அரசாங்கத்தினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும். பலப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு, மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவை அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. சகல இனத்தவர்களும் கௌரவமாக வாழும் சூழலை மீண்டும் பெற்றுக் கொடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM