தமிழ் மக்களை நிராகரிக்கும் கோத்தாபயவை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் - சுமந்திரன் 

Published By: Vishnu

12 Nov, 2019 | 09:39 PM
image

(ஆர்.யசி)

கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே தமிழ் மக்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டனர். இன்றும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் நலன்சார் எந்த திட்டங்களையும் அவர்கள் முன்வைக்கவில்லை.  இந்த நாட்டில் தமிழ்த் தேசிய பிரச்சினை ஒன்று இருப்பதாக கூட அவர் ஏற்றுகொள்ளவில்லை, மாறாக  சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற்று காட்டுவேன் எனக் கூறும் நபரை தமிழ் மக்கள் ஆதரிக்க முடியாது என்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு.  

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது அதிகம் விமர்சிக்கப்படும் வெள்ளைவேன் விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சளார் எம்.எ.சுமந்திரன் இதனைக் கூறினார். 

மஹிந்த ராஜபக்ஷ  2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின் அமெரிக்காவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டவர் தான் கோத்தபாய ராஜபக்ஷ. அவர் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படும் போது இலங்கை பிரஜை கூட இல்லை. தான் ஒரு இலங்கைப் பிரஜை என்று ஒரு ஆவணத்தை சமர்ப்பித்திருக்கிறார். அந்த ஆவணம் போலியானது என்று குற்றப்புலனாய்வு துறையினர் நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். தொடர்ந்து இரட்டை பிரஜையாக இருந்து வந்த கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி ஆசை வந்த பின் அமெரிக்க பிரஜாவுரிமை துறப்பதாக ஆவணம் ஒன்றை காட்டினார்.

சில தினங்களுக்கு முன்னர்  மூன்றாவது காலாண்டுக்கு உரிய அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்தவர்களுக்கான பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது. இதிலும் கோத்தாபயவின் பெயர்  இடம்பெறவில்லை. இப்போது பிரதானமாக இரண்டு கேள்விகள் எம்மத்தியில் எழுகின்றன. அதாவது கோத்தபாய ராஜபக் ஷ  இலங்கை பிரஜாவுரிமையை சரியாகப் பெற்றுக்கொண்டாரா? அதேபோல் அமெரிக்க பிரஜாவுரிமை அவர் உண்மையிலேயே துறந்தாரா? இந்த கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46