பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொராலஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த மாதம் சர்ச்சைக்குரிய தேர்தலில் அவர் போட்டியிட்டதையடுத்து அந்நாட்டில் அதிகரித்துள்ள குழப்பநிலையையொட்டியே அவரது பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் குழறுபடிகள் இடம்பெற்றுள்ளமை தெளிவாக தெரிவதால் அந்தத் தேர்தல் பெறுபேறுகளை வலிதற்றவையென அறிவிக்க வேண்டும் என சர்வதேச கண்காணிப்பாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். தேர்தல் கண்காணிப்பாளர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து ஒப்புக்கொண்டுள்ள மொராலஸ், நாட்டின் தேர்தல் அமைப்பை முழுமையாக சீரமைத்த பின்னர் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கான தனது நோக்கம் குறித்து அறிவிப்புச் செய்துள்ளார்.
ஆனால் அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் தலைவர்கள் ஆகியோர் அரசியலிலிருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஈவோ மொராலஸின் சில நண்பர்கள் கடந்த வார ஆரம்பத்தில் தாக்கப்பட்டனர். அவர்களது வீடுக ளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ஈவோ மொராலஸ் தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாக்குவதையும் சொத்துக்களை தீவைத்துக் கொளுத்துவதையும் நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
பொலிவிய ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு ஒருவருக்குள்ள கால வரையறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்மானத்தை எடுத்ததையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் ஈவோ மொராலஸ் நான்காவது தடவையாக போட்டியிட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM