இன்றைய திகதியில் எம்மில் பலரும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள். இதில் 40 சதவீதத்தினர் மௌனமான மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
மௌனமான மாரடைப்பா...!
எம்மில் பலருக்கு நெஞ்சில் ஓர் அழுத்தம், வயிறு உப்புசம், அதிக வியர்வை, குமட்டல் அல்லது குமட்டல் உணர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் இயல்பாக ஏற்படும். இத்தகைய அறிகுறிகளை எம்மில் பலரும் அலட்சியப்படுத்தி, புறக்கணித்துவிடுகிறார்கள். ஆனால் இதுதான் மௌனமான மாரடைப்புக்கு அறிகுறி என்று இதய நோய் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய அறிகுறி ஏற்படும் தருணத்தில் ஈசிஜி, எக்கோகார்டியோகிராம் போன்ற பரிசோதனைகளை செய்து கொண்டால், இதய தசைகளின் செயலிழப்பு அல்லது இதய தசைகளில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் கண்டறிந்து தெரிவிப்பார்கள். பிறகு அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் இத்தகைய மௌனமான மாரடைப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
இத்தகைய பாதிப்பு ரத்த அழுத்தத்தின் காரணமாகவே ஏற்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா...! ரத்த அழுத்தத்தை உடனடியாக கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், நாளடைவில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்த குழாய் சுருக்கம் அல்லது அடைப்பு ஏற்படும். இதன் காரணமாக இதயத் தசைகளுக்கு கிடைக்க வேண்டிய ரத்த ஓட்டம் கிடைக்காமலும், இதயம் இயங்குவதற்கான பணிகள் தடைபடுகின்றன. இவை ஒரே நாளில் திடீரென்று ஏற்படுவதில்லை. பல மாதங்களாக அல்லது சிலருக்கு சில ஆண்டுகளாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு, இறுதியில் மௌனமான மாரடைப்பு ஏற்படுகிறது.
மேற்கூறிய அறிகுறிகள் தோன்றியவுடன் எக்கோ கார்டியோகிராம் என்ற பரிசோதனைகளை மேற்கொண்டு, அவற்றை இதய நோய் சிறப்பு மருத்துவரிடம் காண்பித்து, உங்களின் இதயத்தின் செயல்பாட்டையும், இதய தசைகளின் செயல்பாட்டையும், இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்கள் மற்றும் இரத்த ஓட்டத்தின் செயல்பாட்டையும் துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டும். அத்துடன் அவர் பரிந்துரைக்கும் வழிமுறைகளையும் உறுதியாக பின்பற்ற வேண்டும். இதனை மேற்கொண்டால் மௌனமான மாரடைப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
டொக்டர் துர்கா தேவி.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM