(இராஜதுரை ஹஷான்)
இராணுவ தலைமையகத்திற்கு சொந்தமான காணியை விற்று அதிலும் தேசிய நிதியை கொள்ளையடித்து இராணுவத்தினையே கேள்விக்குறியாக்கிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தார் இராணுவத்தினர், நாட்டு மக்கள் முன்னிலையிலும் மண்டியிட்டு மன்னிப்புகோர வேண்டும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் கருத்துரைக்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மற்றும் அவரது சகாக்கல் அதனை போலி குற்றச்சாட்டுக்கள் ,அரசியல் பழிவாங்கல் என்றும் குறிப்பிட்டு வழமையாக தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்விதமான முறையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
இராணுவ தலைமையகத்திற்கு சொந்தமான காணி சீனாவிற்கு விற்கப்பட்டமை ஊடக தேசிய நிதி 5 பில்லியன் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டினை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மறுக்க முடியுமா.
நல்லாட்சி அரசாங்கத்திலும் தேசிய நிதி மத்திய வங்கியின் பினைமுறி கொடுக்கல் வாங்கல் ஊடாக இடம் பெற்றுள்ளது என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை. கடந்த அரசாங்கம் போல மூடி மறைக்கவும் இல்லை. அரசாங்கம் அரச காணிகளை சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்குவதாக எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
கடந்த நான்கரை வருட காலமாக ஒரு அங்குல காணியை கூட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கவில்லை. ஒப்பந்த அடிப்படையிலே காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் எதிர் தரப்பினரது போலியான பிரச்சாரத்திற்கு ஏமாற்றமடையாமல் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் சகாக்கல் கருத்துரைப்பது எவ்விதத்திலும் பொறுத்தமற்றது.
ஆகவே அவரே மறுப்புக்களை தெரிப்பதாயின் நேரடியாக விவாதத்தினை முன்னெடுக்க வேண்டும். ஆதாரங்களுக்கான ஆவணங்களை பகிரங்கப்படுத்த தயார் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM