அதி­கா­ரத்தை வழங்­கினால் தீர்வு நிச்சயம் : மஹிந்­தவின்பிரத்­தி­யேக செவ்­வி

Published By: J.G.Stephan

11 Nov, 2019 | 02:16 PM
image

தேசி­யப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து நல்­லாட்சி அர­சாங்கம் கூட்­ட­மைப்­புடன் இணைந்து பல்­வேறு கருத்­துக்­களைக் கூறி­வந்­தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக எத­னை­யுமே செய்­ய­வில்லை. அவ்­வா­றான நிலையில் அவர்கள் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அந்த விட­யங்­களை உள்­ளீர்ப்­பது வேடிக்­கை­யான விட­ய­மா­க­வுள்­ளது என்று பொது­ஜ­ன ­பெ­ர­மு­னவின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­ த­லை­வ­ரு­மான முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் குறிப்­பிட்டார்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட விட­யங்­களை அதி­கா­ர­மி­ருக்கும் போதே பேச முடியும். அதி­கா­ர­மற்ற நிலையில் அவ்­வா­றான விட­யங்­களை வெறும் ஏடு­களில் எழுதிக் காண்­பிப்­பது அர்த்­த­மற்­ற­தாகும். ஆகவே தமிழ் மக்கள் இந்த மாயை­க்குள் சிக்­காது தென்­னி­லங்கை மக்­க­ளையும் ஏற்­றுக்­கொள்ள வைக்கும்  சக்­தியைக் கொண்­டி­ருக்கும் எமக்கு அதி­கா­ரங்­களை வழங்குவதன் ஊடா­கவே உரிய தீர்­வினை அடைய முடியும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அச்  செவ்வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, 

கேள்வி: சஜித் பிரே­ம­தா­ஸ­வி­டத்­தி­லி­ருந்து உங்­க­ளு­டைய வேட்­பாளர் எந்­த­வகையில் வேறு­பட்­டி­ருக்­கின்றார்?

பதில்:- நாட்­டுக்கு பெரும் சேவை­யாற்­றி­ய­வரே கோத்­தா­பய. போரை முடி­வுக்குக் கொண்­டு­வந்து நாட்டின் அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு பெரும் சேவை­யாற்­றி­யுள்ளார். சஜித் அவ்­வாறு அல்ல. தந்­தையின் பெய­ரைக்­கூ­றியே மக்­களிடம் வாக்­கு­களை கோரு­கின்றார். 

கேள்வி:  போரை முடி­வுக்கு கொண்­டு­வந்த உங்­களால் கால அவ­காசம் இருந்தும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது போயுள்­ளதே?

பதில்:- போரை முடி­வுக்கு கொண்டு வந்­ததன் பின்னர் பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். வீதிகள், வீடுகள், வைத்­தி­ய­சா­லைகள், பாட­சா­லைகள் புன­ர­மைப்பு மற்றும் மீள்­நிர்­மா­ணப்­ப­ணி­களை முன்­னெடுத்­தி­ருந்தோம். மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு முழு அளவில் செயற்­பட்டோம். போர் முடிவுக்கு வரு­வ­தற்கு முன்­னரே கிழக்கில் மாகாண சபைத் தேர்­தலை நடத்தி ஜன­நா­ய­கத்­தினை ஏற்­ப­டுத்­தினோம். அதே­போன்று வடக்­கிலும் தேர்­தலை நடத்தி அந்த மக்­க­ளுக்கும் ஜன­நா­யக உரி­மை­களை வழங்­கினோம். ஆயு­தங்­க­ளுடன் சர­ண­டைந்த 13ஆயிரம் போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளித்து சமூ­கத்­துடன் இணைத்தோம். 

1980களில் இருந்து இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த காணி­களை படிப்­ப­டி­யாக விடு­வித்தோம். நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்த வேண்­டு­மாயின் இவ்­வா­றான விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு முழு­மை­யாக நிறை­வு­பெற்­றி­ருக்க வேண்டும். போர் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்கள் மாத்­தி­ரமே ஆட்­சியில் இருந்தோம். அந்­தக்­கு­று­கிய காலத்தில் தேசிய நல்­லி­ணக்­கத்­திற்­காக நாம் ஏரா­ள­மான முயற்­சி­களை முன்­னெ­டுத்­துக்­கொண்­டி­ருந்த வேளையில் தான் ஆட்சி அதி­காரம் எம்­மி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்­டது.

கேள்வி:  எந்­த­வொரு கட்­சி­யிலும் உறுப்­பு­ரி­மையைக் கொண்­டி­ருக்­காத உங்கள் சகோ­த­ரரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­வித்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- கோத்­தா­பய ராஜ­பக் ஷ கட்­சியில் உறுப்­பு­ரி­மையைக் கொண்­டி­ருக்­கின்­றாரா இல்­லையா என்­பது முக்­கி­ய­மான விட­ய­மல்ல. ஆனால் எம்­முடன் இருக்கும் அனை­வரும் அவரை ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். 

கேள்வி:  உங்­க­ளு­டைய ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­ப­யவின் மீது சிறு­பான்மை சமூ­கத்­தினர் எந்­த­ளவு தூரம் நம்­பிக்கை வைக்க முடியும்?

பதில்:- கோத்­தா­பய குறித்து தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் பாரிய நம்­பிக்கை உள்­ளது. அவர் வழங்­கு­கின்ற உறு­தி­மொ­ழிகள் நிச்­சயம் தேர்­தலின் பின்னர் நிறை­வேற்­றப்­படும் என்­பதே அந்த மக்­களின் மத்­தி­யி­லுள்ள அதீத நம்­பிக்­கை­யாகும்.

கேள்வி:  குறிப்­பாக வடக்­கு, கிழக்கில் போர் வடுக்­களை சுமந்­து­கொண்­டி­ருக்கும் தமிழ் மக்கள் எந்த அடிப்­ப­டையில் தமது வாக்­கு­களை கோத்­தா­ப­ய­வுக்கு வழங்க வேண்டும் என்று கோரு­வீர்கள்?

பதில்:- போர் முடி­வுக்கு வந்­த­பின்னர் சமா­தா­ன­மா­ன­தொரு சூழலை கோத்­தா­ப­யவே தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்தார். அதன் பின்னர் தமிழ் மக்கள் அச்­ச­மின்றி வாழ்­கின்­றார்கள். பெற்­றோர்கள் தமது பிள்­ளைகள் குறித்து அச்­சம்­கொள்­வ­தில்லை. இது­வொன்றே தமிழ் மக்கள் கோத்­தா­ப­ய­வுக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு  போது­மான கார­ண­மாகும். 

நல்­லாட்சி அர­சாங்கம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் அர­சியல் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­தது. ஆனால் தமிழ் மக்­க­ளுக்கு அதனால் எவ்­வி­த­மான பயனும் ஏற்­ப­ட­வில்லை. ஆனால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் கூட்­ட­மைப்பு எம்­முடன் நேர்­மை­யாக எந்­த­வொரு அர­சியல் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. தமிழ் மக்­க­ளுக்கு வேண்­டிய விட­யங்­களை செய்து முடித்தோம். இதுவே வேறு­பா­டாகும். இதனை தமிழ் மக்­களும் உணர வேண்டும்.  ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்­ட­மைப்பு இணைந்து கூறும் போலிக்­க­தை­களால் எவ்­வி­த­மான பய­னு­மில்லை.

கேள்வி:  ஐந்து தமிழ்க் கட்­சிகள் இணைந்து முன்­வைத்த 13 அம்­சக் ­கோ­ரிக்­கை­களை நீங்கள் பரி­சீ­லித்தோ அல்­லது கலந்­து­ரை­யா­டியோ பார்க்­காது உட­ன­டி­யாக நிரா­க­ரித்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- தமிழ்க் கட்­சிகள் முன்­வைத்த கோரிக்­கைகளை தனி ஈழத்­தினை உரு­வாக்­கு­வ­தற்­கா­ன­தொன்­றா­கவே கரு­து­கின்றோம். அதனை ஏற்­றுக்­கொள்­ளவே முடி­யாது.

கேள்வி:  தமிழ் மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு செவி­சாய்த்தால் தென்­னி­லங்­கையில் வாக்கு வங்கி சரிந்து விடும் என்று அச்­சப்­ப­டு­கின்­றீர்­களா?

பதில்:- அந்தக் கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொண்டால் தென்­னி­லங்கை வாக்­குகள் குறைந்­து­விடும் என்று அர்த்­தப்­ப­டுத்த முடி­யாது. தனி ஈழத்­திற்­கான கொள்­கை­யையும் சிந்­த­னை­யையும் நாங்கள் அடி­யோடு நிரா­க­ரிக்­கின்­ற­மை­யி­னா­லேயே 13 அம்­சக் ­கோ­ரிக்­கைகள் பற்றிப் பேசு­வதை புறக்­க­ணித்தோம். அயல்­நா­டான இந்­தி­யாவும் அந்தக் கோரிக்­கை­க­ளுக்கு எதி­ரா­கவே உள்­ளது.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிக்கும் முடி­வினை எடுத்­துள்­ள­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அர­சி­ய­ல­மைப்­புக்­கான யோச­னை­களை சஜித் பிரே­ம­தாஸ தனது கொள்­கைப்­பி­ர­க­ட­னத்தில் உள்­ள­டக்கி உள்­ள­மை­யி­னா­லேயே சுமந்­திரன் உள்­ளிட்­ட­வர்கள் அவ­ருக்கு ஆத­ர­வ­ளித்­துள்­ளார்கள். தமிழ் மக்­களைப் பாது­காக்­கின்ற கட்­சி­யாக கூட்­ட­மைப்­பினை கரு­த­மு­டி­யாது. மாறாக ஐக்­கிய தேசியக் கட்­சியைப் பாது­காக்­கின்ற பணி­யி­னையே கூட்­ட­மைப்பு செய்து வரு­கின்­றது. எனவே தான் வடக்கு மக்கள் கூட்­ட­மைப்பின் தலை­வர்­களைக் கண்டால் பாத­ணி­களை தூக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. 

தற்­போது கூட சஜித்தின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மாறு­பட்ட வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்தி தமிழ் மக்­க­ளி­டத்தில் ஒரு­வி­ட­யத்­தி­னையும் சிங்­கள மக்­க­ளி­டத்தில் இன்­னொன்­றையும் முன்­மொ­ழிந்து ஏமாற்றி வாக்­கு­களை பெறவே முயல்­கின்­றார்கள். இந்த வார்த்தை ஜால விளை­யாட்டின் பின்­ன­ணியில் சுமந்­தி­ரனே இருக்­கின்றார். இதனை வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனே சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். குறிப்­பாக தமிழ் மக்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு, இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு என்ற மாயைக்குள் சிக்­கக்­கூ­டாது. 

கேள்வி: சம்­பந்தன் மீது மரி­யாதை வைத்­தி­ருப்­ப­தாக கூறும் நீங்கள் அவ­ருடன் அர­சியல் ரீதி­யான இணக்­கப்­பாட்­டினை ஏற்­ப­டுத்த முடி­யா­தி­ருப்­ப­தற்கு என்ன காரணம்?

பதில்:- கூட்­ட­மைப்­பிடம் அவர்­க­ளது யோச­னைத்­திட்­டங்­க­ளுடன் என்னை சந்­திக்­கு­மாறு இத­ய­சுத்­தி­யுடன் அழைப்பு விடுத்­தி­ருந்தேன். ஆனால் அவர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருந்­தனர். 

கேள்வி: இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசிய பாது­காப்­புக்கு அதீத முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­கின்­ற­மைக்கான காரணம் என்ன?

பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லினால் நாட்டின் சிங்­கள, தமிழ், கிறிஸ்­தவ மக்கள் இலக்­கு ­வைக்­கப்­பட்­டனர். இதுவே ஆசி­யாவில் சிவி­லி­யன்­களை குறி­வைத்து இடம்­பெற்ற பாரிய பயங்­க­ர­வாத தாக்­குதலாகும். இவ்­வா­றான அச்ச நிலை­மை­யுடன் நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்­வது கடின­மாகும். சுற்­று­லாத்­து­றையும் முத­லீட்­டா­ளர்கள் வரு­கையும் பாதிப்­ப­டையும். பொது­மக்­களின் அன்­றாட வாழ்க்கை கேள்­விக்­கு­றி­யாகும். எனவே தேசிய பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­தாது ஏனைய விட­யங்­களை முன்­னெ­டுப்­பது சாத்­தி­ய­மற்­ற­தாகும். 

கேள்வி: இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக 13பிளஸ் பற்றி பேசிய நீங்கள் அதனை இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கா­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- அவ்­வா­றான விட­யங்­களை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ளீர்ப்­பது வேடிக்­கை­யான விட­ய­மா­க­வுள்­ளது. அதி­கா­ர­மி­ருக்கும் போதே இந்த விட­யங்கள் பற்­றிப்­பேச முடியும். அதி­கா­ர­மற்ற நிலையில் அவ்­வா­றான விட­யங்­களை வெறும் ஏடு­களில் எழுதிக் காண்­பிப்­பது அர்த்­த­மற்­ற­தாகும். 

கேள்வி:  நீங்கள் ஆட்சி அதி­கா­ரத்­தினை ஏற்றால் தேசிய பிரச்­சி­னைக்­கான உங்­க­ளது தீர்வுத் திட்டம் என்ன? அதனை எவ்­வ­ளவு காலத்­திற்குள் வழங்­கு­வீர்கள்?

பதில்:- தேசி­யப் ­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து நல்­லாட்சி அர­சாங்கம் பல்­வேறு கருத்­துக்­களைக் கூறி­வந்­தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக எத­னை­யுமே செய்­ய­வில்லை. அவ்­வா­றி­ருக்க எம்­மாலும் உறு­தி­யாக கால எல்­லையை வரை­ய­றுக்க முடி­யாது. ஆனால் நாங்கள் அளித்த வாக்­கு­று­தி­களை நிச்­சயம் நிறை­வேற்­றுவோம். தமிழ் மக்கள் நிரந்­த­ர­மான தீர்­வினை எட்­ட­வேண்­டு­மானால் எமக்கே அதி­கா­ரத்­தினை அளிக்க வேண்டும். 

கேள்வி:  உங்­க­ளது ஆட்­சி­யி­லேயே போர்க் குற்­றங்கள் இடம்­பெற்­ற­தா­கவும் காணா­ம­லாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் நிகழ்ந்­த­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றனவே? 

பதில்:- போர்க்­குற்றம் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் கருத்­துக்கள் முற்­றிலும் உண்­மைக்கு புறம்­பா­னவை. மேற்­குலக நாடு­களின் முக்­கி­யஸ்­தர்கள் ஏற்­றுக்­கொண்ட சர்­வ­தேச போர் விதி­க­ளுக்கு அமை­வா­கவே நாங்கள் இறு­திப்­போரை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். விடு­த­லைப்­ பு­லி­க­ளைப் ­போன்று இரா­ணு­வத்­தி­னரும் காணா­ம­லா­கி­யுள்­ளனர். இவ்­வா­றான விட­யங்­களை கண்­ட­றி­வ­தற்கு பர­ண­கம ஆணைக்­கு­ழுவை ஸ்தாபித்­தி­ருந்தோம். 

ஆனால் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சியில் அமர்ந்த பின்னர் அனைத்தும் குழப்­பி­ய­டிக்­கப்­பட்­டது. காணா­ம­லாக்­கப்­பட்டோர் பற்றி அலு­வ­ல­க­மொன்றை ஸ்தாபித்து சாட்­சிப்­ப­தி­வு­களை ஆரம்­பித்­துள்­ளார்கள். இதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் வெறுப்­ப­டையும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. மேலும் போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருந்தால் சரத்­பொன்­சேகா 2010இல் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­ய­போது தமிழ் மக்கள் ஆத­ரித்­தி­ருக்க மாட்­டார்கள் அல்­லவா?

கேள்வி:  கோத்­தா­ப­யவின் முத­லா­வது ஊடக சந்­திப்­பின்­போது இறு­திக்­கட்ட போர் தொடர்பில் இரா­ணு­வத்­த­ள­ப­தி­களே பொறுப்­புக்­ கூ­ற­வேண்­டு­மென பதி­ல­ளித்­ததன் ஊடாக படை­யி­னரை காட்­டிக்­கொடுத்­து­விட்­ட­தாக சஜித் பிரே­ம­தாஸ குற்றம் சுமத்­தி­யுள்­ளாரே?  

பதில்:- அந்த ஊடக சந்­திப்பில் சஜித்­பி­ரே­ம­தாஸ பங்­கேற்­க­வில்லை. இறு­திக்­கட்ட போர் தொடர்­பான பொறுப்­புக்­கூறலை மற்­று­மொரு தரப்­புக்கு வழங்க நாங்கள் முயற்­சிக்­க­வில்லை. முப்­ப­டை­களின் தள­பதி என்ற வகை­யிலும், அர­சியல் ரீதி­யாக தலை­மையை வழங்­கி­யவர் என்ற வகை­யிலும் முழுப் ­பொறுப்பினையும் நானே ஏற்­கின்றேன். 

கேள்வி:  ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் நல்­லாட்சி அர­சாங்கம் வழங்­கிய உறு­தி­மொ­ழிகள் குறித்து உங்­க­ளது ஆட்­சியில் எவ்­வா­றான நட­வ­டி­க்கைகள் எடுக்கப்­ப­ட­வுள்­ளன? 

பதில்:- ஐ.நாவுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை இந்த அர­சாங்­கமே நிறை­வேற்ற வேண்டும். அந்த பொறுப்­புக்­களை எங்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பாரா­ளு­மன்ற ஆட்சி முறையில் காணப்­ப­டு­கின்ற முக்­கிய சித்­தாந்தம் யாதெனில் ஒரு பாரா­ளு­மன்றம் முன்­னெ­டுக்­கின்ற விட­ய­மொன்­றுக்கு புதி­தாக உரு­வாக்­கப்­படும் பாரா­ளு­மன்றம் பொறுப்­புக்­கூற வேண்டிய­தில்லை என்­ப­தாகும். 

கேள்வி: கோத்­தா­பய வெற்­றி­பெற்றால் நீங்கள் பிர­த­ம­ரா­கு­வீர்கள். அதன் பின்னர் நாட்டில் குடும்ப ஆட்­சியே ஏற்­படும் என்று விமர்சிக்­கப்­ப­டு­கின்­றதே? 

பதில்:- 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் பிர­காரம் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் என்ற வகையில் நாட்டின் நிரு­வா­கத்­தினை கோத்­தா­ப­யவும் நானும் இணைந்தே முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. வேறொ­ருவர் தெரி­வானால் சிக்கல் நிலையே ஏற்­படும். குடும்ப ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தாக எம்­மைச்­சாடும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் முன்னாள் ஜனா­தி­ப­தியின் மரு­மகன். அவர்­களின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் முன்னாள் ஜனா­தி­ப­தியின் புதல்வர். இந்­நி­லையில் அவர்கள் எவ்­வாறு குடும்ப ஆட்­சி­யா­ளர்­க­ளாக சாட முடியும். கோத்­தா­பய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரா­னதும், பொது­ஜன பெர­மு­னவின் தேசிய அமைப்­பா­ள­ராக பசில் ராஜ­பக் ஷ பத­வி­யேற்­றதும் எனது சகோ­த­ரர்கள் என்ற கார­ணத்­தினால் அல்ல. போரின் பின்னர் இவர்கள் தமது ஆளு­மை­களை வெளிப்­ப­டுத்­தி­ய­மை­யா­லேயே ஆகும். 

கேள்வி: அமெ­ரிக்­கா­வுடன் கைச்சாத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சோபா, எட்சா ஒப்பந்தங்கள் குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன? 

பதில்:- தற்போது அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் நாம் மீளாய்வு செய்வோம். அவற்றில் வேண்டிய திருத்தங்களையும் மேற்கொள்வோம். எதிர்காலத்தில் கைச்சாத்திடவுள்ள அனைத்து ஒப்பந்தங்கள் குறித்தும் முழு அளவில் கவனம் செலுத்துவோம். பாராளுமன்ற விவாதங்களுக்குப் பின்னரே சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்போம்.

கேள்வி: ராஜபக் ஷவினரின் ஆட்சி அமைந்தால் சீனாவுடன் நெருக்கமாக செயற்படுவார்கள் என்ற விமர்சனத்திற்கு உங்களின் பதில் என்ன?

பதில்:- சீனாவுடன் மிக நெருக்கமான உறவுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். அதேபோன்று இந்தியாவுடனும் அவ்வாறானதொரு இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்பவே விரும்புகின்றோம். எங்களது நிலைப்பாடுகள் குறித்து இந்தியா தற்போது சரியான புரிதலுடன் உள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்தினையும் இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை. 

கேள்வி:  தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உங்களுடைய அரசாங்கத்தில் எவ்வாறான வகிபாகம் இருக்கும்?

பதில்:- எமது கூட்டணியின் பங்காளிக்கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன உள்ளார். எதிர்காலத்திலும் அவர் எம்முடன் இணைந்தே செயற்படுவார். 


நேர்காணல் : ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54