இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்டத் தொடர் அரையிறுதிப் போட்டிகளை எட்டியுள்ளது.
பெரும் போட்டிக்கு மத்தியில் அரையிறுதிக்கு நுழைந்துள்ள அணிகளான கொலம் போ எவ்.சி. அணியானது இலங்கை இராணுவ அணி யை நாளை எதிர்த்தாடுகிறது. இந்தப்போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதன் இரண்டாவது அரையிறு திப்போட்டியில் சௌண்டர்ஸ் மற்றும் ரினோன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியும் அதேநாளில் குதிரைப்பந்தயத் திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதும். முன்னதாக நேற்றுமுன்தினம் நடை பெற்ற இறுதி காலிறுதிப்போட்டியில்
களுத்துறை புளூ ஸ்டார் கழகத்தை 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு அரையிறுதிக்கு நுழைந்தது சௌண்டர்ஸ் கழக அணி.
இந்தப் போட்டியில் இரண்டு அணிகளுமே கோல் போடுவதற்கு பெரிதும் போராடின. ஆனாலும் இவ்விரு அணிகளாலும் எளிதில் கோல்
போடமுடியாமல் போனது. இறுதியில் 68ஆவது நிமிடத்தில் சௌண்டர்ஸ் அணி வீரர் மொஹமத் கோலைப் போட்டு அணியை முன்னிலைப் படுத்தினார். அதன்பிறகு கோல்களைப் போட எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட 1–-0 என்ற அடிப்படையில் சௌண்டர்ஸ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM