பங்களாதேஷ் மற்றும் இந்தியாவைத் தாக்கிய புல்புல் சூறாவளியில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்காள விரிகுடா பிராந்தியத்தை தாக்கிய புல்புல் சூறாவளியால் பங்களாதேஷில் நால்வர் பலியானதுடன் 20 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சரிந்து விழுந்த மரங்களின் கீழ் சிக்கியே மேற்படி உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சுமார் 4,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அதேசமயம் இந்த சூறாவளியால் அயல்நாடான இந்தியாவிலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் கொல்கத்தாவிலுள்ள வீடொன்றின் மீது மரம் சரிந்து விழுந்ததால் பலியான இருவரும் முறிந்து விழுந்த மரக்கிளைகளின் கீழ் சிக்கி பலியான ஒருவரும் உள்ளடங்குகின்றனர் ஒடிசா மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் நான்காமவர் பலியாகியுள்ளார்.
இந்நிலையில் பங்களாதேஷிலும் இந்தி யாவிலும் துறைமுகங்களும் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. சூறாவளியையொட்டி படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பங்களாதேஷின் தென்மேற்குக் கடற்கரைக்கு அப்பாலுள்ள சென். மார்டின் தீவில் சுமார் 1,500 சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாது சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷில் இந்த சூறாவளியால் தாழ்வான கரையோர பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 2.1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதேசமயம் இந்தியாவில் சுமார் 120,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM