தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழக் கூடிய சூழலை நாம் உருவாக்குவோம். ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போன்று நாம் தமிழ் மக்களை ஏமாற்றப் போவதில்லை அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட மூன்று மொழிகளிலும் மூன்று விதமாக விடயங்களை முன்வைத்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரசாரக் கூட்டம் நேற்று பிற்பகல் கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தில் 4000 ஆயிரம் மில்லியன்களை பெற்றுள்ளனர். ஆனால் என்ன செய்தனர்? கிளிநொச்சியில் எங்களுடைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியை விட சொல்லுமளவுக்கு எந்த அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது.சஜித் ஏமாற்றுகிறார்.இதற்குள் இணைந்துகொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் கூட்டு களவானிகளாக உள்ளனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி கோத்தபாய ராஜபக்ஸ் விமான ரிக்கட் பெற்றுள்ளார் என பொய்யான பரப்புரையை மேற்கொண்டுள்ளனர். அவர் ஜனாதிபதி மாளிகைக்கு செல்வதற்கான ரிக்கட்டையே பெற்றுளள்ளார். அவர் அமெரிக்க பிரஜை என அமெரிக்காவிலும், இலஙகையிலும் வழக்குத் தொடுத்தனர் அவை அனைத்திலும் தோல்வியே கண்டனர்
நாம் மீண்டும் ஜனாதிபதியாக வந்தால் எங்களுடை காலத்தில் போன்று அபிவிருத்திகளை கொண்டுவருவோம், முன்னாள் போராளிகளுக்கு அரச வேலைவாய்ப்பு, மாற்றுவலுவுள்ளோர்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மேம்பாடு, அத்தோடு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பலப்படுத்த்பபட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் விவசாயிகளுக்கு இலவசமான உரம், உற்பத்திகளுக்கு சந்தைவாய்ப்பு போன்ற மக்களின் அவசிய தேவைகள் நிறைவேற்றப்படும்
இக் கூட்டத்தில் எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன்,முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சி தலைவர் தவராசா மற்றும் பெருமளவான பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM