தமிழ் மக்கள் தலை­நி­மிர்ந்து வாழும் சூழலை உரு­வாக்­குவோம்: மகிந்த

Published By: J.G.Stephan

11 Nov, 2019 | 10:52 AM
image

தமிழ் மக்கள் தலை­நி­மிர்ந்து வாழக் கூடிய சூழலை நாம் உரு­வாக்­குவோம். ஜக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் போன்று நாம் தமிழ் மக்­களை ஏமாற்றப் போவ­தில்லை அவர்­களின் தேர்தல் விஞ்­ஞாப­னத்தில் கூட மூன்று மொழி­க­ளிலும் மூன்று வித­மாக விட­யங்­களை முன்­வைத்­துள்­ளனர் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ் தெரி­வித்­துள்ளார்.

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்­ஸ­வுக்கு ஆத­ரவு தெரி­விக்கும் பிர­சாரக் கூட்டம்  நேற்று   பிற்­பகல்  கிளி­நொச்சி பசுமை பூங்­காவில் இடம்­பெற்­றது. இதன் போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு இந்த அர­சாங்­கத்தில் 4000 ஆயிரம் மில்­லி­யன்­களை பெற்­றுள்­ளனர். ஆனால் என்ன செய்­தனர்?  கிளி­நொச்­சியில் எங்­க­ளு­டைய காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்­தியை விட சொல்­லு­ம­ள­வுக்கு எந்த அபி­வி­ருத்திப் பணி­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு  தமிழ் மக்­களை ஏமாற்றி வரு­கி­றது.சஜித் ஏமாற்­று­கிறார்.இதற்குள் இணைந்­து­கொண்டு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் கூட்டு கள­வா­னி­க­ளாக உள்­ளனர்.

எதிர்­வரும் 18 ஆம் திகதி கோத்­த­பாய ராஜபக்ஸ் விமான ரிக்கட் பெற்­றுள்ளார் என பொய்­யான பரப்­பு­ரையை மேற்­கொண்­டுள்­ளனர். அவர் ஜனா­தி­பதி மாளி­கைக்கு செல்­வ­தற்­கான ரிக்­கட்­டையே பெற்­று­ளள்ளார். அவர் அமெ­ரிக்க பிரஜை என அமெ­ரிக்­கா­விலும், இல­ங­கை­யிலும் வழக்குத் தொடுத்­தனர் அவை அனைத்­திலும் தோல்­வியே கண்­டனர்  

நாம் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக வந்தால்  எங்­க­ளுடை காலத்தில் போன்று அபி­வி­ருத்­தி­களை கொண்­டு­வ­ருவோம், முன்னாள் போரா­ளி­க­ளுக்கு  அரச வேலை­வாய்ப்பு, மாற்­று­வ­லு­வுள்­ளோர்கள் பெண்  தலை­மைத்­துவ குடும்­பங்கள் மேம்­பாடு, அத்­தோடு சிவில் பாது­காப்புத் திணைக்­களம் பலப்­ப­டுத்த்­ப­பட்டு வேலை­வாய்ப்பு வழங்­கப்­படும் விவ­சா­யி­க­ளுக்கு இல­வ­ச­மான உரம், உற்­பத்­தி­க­ளுக்கு சந்­தை­வாய்ப்பு போன்ற மக்­களின் அவ­சிய தேவைகள் நிறை­வேற்­றப்­படும்  

 இக் கூட்­டத்தில் எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜ­பக்ஸ மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன்,முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே  வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சி தலைவர் தவராசா மற்றும் பெருமளவான பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04