(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டிருப்பது உண்மையானால் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஏன் அது தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணத்தை வெளிப்படுத்தவில்லை என்று அமைச்சர் அஜித் பி பெரேரா கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, கோத்தபாய அமெரிக்க பிரஜை அல்ல என்பதை கூறுவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துகின்றார். இவ்வாறு பிரத்தியேக சட்டத்தரணியையும், கட்சி பிரதிநிதிகளையும், பேச்சாளர்களையும் தூது அனுப்புவதன் மூலம் தான் அமெரிக்க பிரஜை அல்ல என்று கூற வேண்டிய அவசியமில்லை. உண்மையில் கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டிருந்தால் அவரே நேரடியாக உண்மையான ஆதாரத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அதனை அறிவிக்க முடியும்.
ஆனால் அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை செய்யவில்லை. கோத்தபாயவுக்காக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தும் சட்டத்தரணி அலி சப்ரியிடம் சில கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்க்கின்றோம்.
'கோத்தபாய ராஜபக் ஷ இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொண்டால் அதன் போது சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் இலக்கம் என்ன?, அதற்காக எப்போது கட்டணம் செலுத்தப்பட்டது?, கட்ட ணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டை வெளிப்படுத்த முடியுமா?, சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் உண்மை தன்மை இலங்கை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதா?, குறித்த தினத்தில் வழ ங்கப்பட்ட ஏனைய விண்ணப்பங்கள் அனைத்தும் குடிவரவு -குடியகல்வு திணைக்களத்தில் இருக்கும் போது, கோத்தபாய வின் ஆவணங்கள் மாத்திரம் எவ்வாறு காணாமல் போனது? என்ற கேள்விகளுக்கு அலிசப்ரி பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதே அர்த்தமாகும்.
எனவே இவ்விடயம் தொடர்பில் நாட்டு மக்கள் விழிப்படைய வேண்டும். எவ் வாறிருப்பினும் கோத்தபாய ராஜபக் ஷ அமெரிக்க பிரஜையானாலும் சரி, இல்லையென்றாலும் சரி நிச்சயம் அவர் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார். புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவால் இலகுவாக தோல்வியடைச் செய் யக் கூடியவர் கோத்தபாயவே ஆவார். எனவே அவர் நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எமதும் சஜித்தினதும் ஆசையாகும். எனவே தான் கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் நாம் எமது தேர்தல் பிரசார கூட்டங்களில் கருத்துக்களை வெளியிடுவதில்லை என் றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM