கடற்படை அதிகாரிக்கும் எனக்கு எந்தவித முரண்பாடுமில்லை. அந்த அதிகாரி என்றும் எனது சகோதரர். அவரை நான் பிழையாக பார்க்கவில்லை. இந்நிலைமைக்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட் தெரிவித்தார்.
சம்பூரிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது கடற்படை அதிகாரியொருவரை திட்டிப்பேசிய சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
சம்பூர் நிகழ்வுக்கு முன்பாக கிண்ணியாவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட நானும் முன்னாள் முதலமைச்சர் நஜீப் புறக்கணிக்கப்பட்டோம். அதேபோன்றுதான் சம்பூரிலும் இடம்பெற்றது. ஒரு மாகாண முதலமைச்சரை தடுப்பது என்பது அதுவும் எங்களது மக்கள் மத்தியில் எங்கள் மாகாணத்தில் எங்களை இழிவு படுத்துவதென்பது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த கௌரவத்தையும் மக்களின் மன நிலையையும் கொச்சைப்படுத்துவது போன்று எனக்கு நடத்தப்பட்ட அந்த செயல் வேதனையைத்தருகின்றது.
சம்பூரில் நடைபெற்ற குறித்த வைபவத்திற்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்க உயர்ஸ்த்தானிகர், படை அதிகாரிகள் என பலரும் வருகை தந்திருந்தனர். ஆனால் அந்த வைபவத்திற்கு முதல் ஒரு வைபவம் கிண்ணியாவில் நடைபெற்றது. நான் அங்கும் சென்றிருந்தேன். அந்த வைபவத்தில் மேற்படி பிரமுகர்களுடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத்தும் கலந்து கொண்டிருந்தார். அந்த வைபவத்திலும் நான் உட்பட முன்னாள் முதலமைச்சர் என இருவரும் புறக்கணிக்கப்பட்டோம்.
கிண்ணியாவில் நடைபெற்ற அந்த வைபவத்திற்கு பின்னர் சம்பூரில் பாடசாலையொன்றில் இந்த வைபவம் நடைபெற்றது.
அப்போது அந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகளை வழங்குவதற்காக முதலாவது கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் அழைக்கப்பட்டனர். மேடைக்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுனர் என்னையும் அழைத்தார். இவர்களிருவரின் பெயர்களும் கௌரவமாக அழைக்கப்பட்டு மேடைக்கு இவர்கள் போய் விட்டனர்.
அப்போது அவ்விடத்திற்கு போய் ஆளுனர் ஒரு சாதரண ஒருவரை கூப்படுவது போன்று என்னையும் அவ்விடத்திற்கு அழைத்தார். இதனை வெட்கத்தை விட்டும் கூறவேண்டியுள்ளது. ஒரு மாகாணத்தின் முதலமைச்சரை தரக் குறைவாக அழைத்தார். பரவாயில்லை. அதனை நான் பொருட்படுத்தாமல் சம்பூர் பிரதேசம் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணியின் தொகுதி என்பதால் அவரையும் அழைத்துக் கொண்டு நான் முன்னே சென்று கொண்டிருந்தேன். கல்வியமைச்சர் பின்னால் வந்து கொண்டிருந்தார். மேடைக்கு சென்றபோது அங்கு நின்ற கடற்படை அதிகாரி எனது வயிற்றில் கையை வைத்து என்னை வரவேண்டாம் என தடுத்தார். அது அவருடைய பிழையில்லை. ஏனெனில் எனது பெயரை அங்கு அழைக்கவில்லை. அதனால் அவர் என்னை தடுத்திருக்கலாம். அவரில் பிழை என கூறமுடியாது.
எனினும் என்னை அங்கு தடுத்த அந்த கடற்படை அதிகாரிக்கு இந்த கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற ரீதியில் மாகாணத்தின் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரத்துக்குரிய அரசியல் தலைவர் என்ற ரீதியில் அவருக்கு ஒரு அறிவுரை சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த அறிவுரையே நான் அவ்விடத்தில் செய்தேன்.
ஒரு மாகாண முதலமைச்சரை தடுப்பது என்பது அதுவும் எங்களது மக்கள் மத்தியில் எங்கள் மாகாணத்தில் எங்களை இழிவு படுத்துவதென்பது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துவது போன்றாகும். கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த கௌரவத்தையும் மக்களின் மன நிலையையும் கொச்சைப்படுத்துவது போன்று எனக்கு நடத்தப்பட்ட அந்த செயல் வேதனையைத்தருகின்றது. இந்தப்பிழைக்கு காரணம் கிழக்கு மாகாண ஆளுனராகும். அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதால்தான் இவ்வாறான சம்பவம் இங்கு இடம்பெற்றது.
அதிகாரத்தை ஆளுனர் வைத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்வதால் வந்த விடயமே இந்த சம்பவமாகும். மாறாக கடற்படை அதிகாரிக்கும் எனக்கு எந்தவித முரண்பாடுமில்லை. அந்த அதிகாரி என்றும் எனது சகோதரர். அவரை நான் இங்கு பிழையாக பார்க்கவில்லை. ஆனால் இவ்வளவுக்கும் காரணம் கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமேயாகும்.
அவ்விடத்தில் யாராக இருந்தாலும் என்னுடைய சகோதரராக இருந்தாலும் நான் அந்த அறிவுரையை செய்தே இருப்பேன்.
படை அதிகாரிகளுடன் நாங்கள் ஒற்றுமையை பேணி நடந்து கொள்கின்றோம். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒற்றுமை இருக்கின்றது. படை அதிகாரிகளுடன் ஒற்றுமைப்பட்டு வேலை செய்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM