தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தன்னை தெரிவு செய்த கொளத்தூர் தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தன்னை சட்டமன்ற உறுப்பினராக தெரிவு செய்த கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு வீதி வீதியாக சென்று நேரில் நன்றி தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மு.க.ஸ்டாலினுக்கு ஆராவார வரவேற்பு அளித்தனர். ஏராளமானோர் அவருக்கு கை குலுக்கியும், சால்வை அணிவித்தும், மலர் மாலைகள் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இளைஞர்கள், மாணவ, மாணவியர் உட்பட ஏராளமானோர் அவருடன் ஆர்வத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதனிடையே இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளுங்கட்சி மற்றும் ஏனைய கட்சித்தலைவர்களும், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் வாக்காளர்களுக்கு நேரில் செல்லாமல் பதாகைகள் மூலம் நன்றி தெரிவித்து வருவது வாக்காளர்களிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது கவனிக்கத்தக்கது.
தகவல் : சென்னை தகவல்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM