(செய்திப்பிரிவு)
தலைமன்னார் கடற்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவைப்பில் 904.6 கிலோ கிராம் பீடி இலைகளை 21 பொதிகளில் மீன்பிடி படகில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப் பட்டிருப்ப தாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.
மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ள தாகவும், சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை மற்றும் மீன்பிடி படகு என்பன மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்ப தாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, காரைத்தீவு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது காரைத்தீவு கடற்பரப்பில் 52 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டு நாட்டிற்குச் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 3018.80 கிலோகிராம் பீடியிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இந்த பீடி இலைகள் சுங்க நிறைவேற்று பணிப்பாளரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 48,000 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM