நாட்டுக்கே ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் நட்டம் இந்த ஆண்டு 89 பில்லியன் ரூபாவாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “விதுலி புராணய” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மின்சார சபையில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய நெருக்கடி குறித்த பொறுப்பில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு விலகிக்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் நீர்வழங்கல், பெற்றோலியம் மற்றும் இலங்கை விமான சேவை ஆகிய நிறுவனங்களிலும் இடம்பெறும் முறைக்கேடுகள் நாட்டை பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரசாங்கம் என்ற வகையில் தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது இந்த நிறுவனங்களிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM