(ஆர்.விதுஷா)
நிதியமைச்சர் மங்கள சமரவீர விடுத்த சவாலையேற்று அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள மிலேனியம் சலேஞ் கோர்பரேசன் உடன்படிக்கையில் உள்ள பாதகமான விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கும் முன்னிலை சோஷலிசக் கட்சியின் முக்கிஸ்தர் புபுது ஜெயகொட, நிதியமைச்சர் அரசியலிலிருந்து விலகிக் கொள்வாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னிலை சோஷலிச கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது ,
மிலேனியம் சலேஞ் கோர்பரேசன் ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் தோன்றியுள்ளன. மிலேனியம் சலேஞ் கோர்பரேசன் என்பது திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாக இலாபம் உழைக்கும் அமெரிக்க நிறுவனம் ஆகும்.
இது அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனமாகும். அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் அவர்கள் முதலில் குறிப்பிட்டிருந்த விடயம் வறுமையை ஒழித்தல், பயங்கரவாதம் தோன்றுவதற்கு ஏதுவான காரணிகளை இல்லாதொழித்தல், போசனை உணவு உற்பத்தி என்பனவாகும்.
மிலேனியம் சலேஞ் கோர்பரேசன் மேலும் 29 நாடுகளுடன் இந்த உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது. அவர்கள் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ள எந்த நாட்டிலும் பயங்கரவாத நிலைமை இல்லை அதேபோல், வறுமையை ஒழிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வகையில் எமதுநாட்டை எடுத்து கொண்டால் மொனராகலை , ஹம்பாந்தோட்டை , அம்பாறை, வவுனியா, புத்தளம், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களே வறிய பிரதேசங்கள் ஆகும்.
ஆயினும் அவர்கள் இந்த மாவட்டங்களை தெரிவு செய்யவில்லை. மாறாக திருகோணமலை, கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களையே தெரிவு செய்துள்ளனர். இதன் ஊடாக வறுமையை ஒழிப்பதற்காக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயம் ஆகும். வறுமையை ஒழிப்போம் என்னும் போர்வையில் கொண்டுவரப்படும் வேறொரு திட்டமே இந்த ஒப்பந்தமாகும்.
அமெரிக்காவின் குறிக்கோளாக இருப்பது திறந்த பொருளாதார கொள்ளையின் ஊடாக அனைத்து நாடுகளின் வளத்தையும் தம்வசப்படுத்துவதே ஆகும். மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்ததை மாத்திரம் பார்ப்பதன் ஊடாக பிரச்சினைக்கு தீர்வினை காண முடியாது.
இந்த ஒப்பந்தத்தில் மூன்று வகை உள்ளது. மிலேசியம் சலேஞ் உடன்படிக்கை , உடன்படிக்கையை செய்வதற்கு ஏதுவான காரணங்களை ஆராய்தல், கைச்சாத்திடுவதற்கு அமெரிக்க காங்கிரஸ் உடன் படுதல் போன்ற மூன்று உடன்படிக்கைகள் இதன் வழிவருகின்றன.
அவற்றில் முதலில் 2018 ஆம் ஆண்டிலும், இவ்வருடத்தில் ஏப்ரல் மாதத்திலும் அதற்கான ஆய்வு நடவடிக்கைளை அமெரிக்கா மேற்கொண்டிருந்தது. இந்நிலையிலேயே இரண்டாவது வகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கையையே அமெரிக்கா தற்போது மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் , நாட்டிற்கு கேடு விளைவிக்கும் பகுதி அடையாளம் காட்டும் பட்சத்தில் தான் அரசியலிலிருந்து நீங்குவதாக நிதியமைச்சர் கூறியிருந்தார். அவ்வாறெனின் இத்தகைய நாட்டிற்கு கேடு விளைவிக்கும் விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி உள்ளோம். அமைச்சர் அரசியலிலிருந்து விலகத் தயாரா ? எனவும் கேள்வி எழுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM