புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
இன்று வட பகுதிக்கு விஜயம் செய்யும் அவர், நாளைய தினம் கிழக்கில் பல பகுதிகளிலும் பிரசாரக்கூட்டங்களை நடத்தவுள்ளார்.
இன்று காலை மன்னாரில் இடம்பெறும் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்கும் சஜித் பிரேமதாச அதனையடுத்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
நாளை சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அட்டாளைச்சேனை, கல்முனை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவுள்ளார்.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் பிரசாரகூட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்னனர்.
அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டம் அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் , முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மத்திய குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு ( கிட்டுப்பூங்கா ) வில் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறும் மாபெரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் வெற்றிக் கூட்டத்தை தொடர்ந்து, தென்னிந்திய இசை கலைஞர்களான நிக்கல் மெத்தியு, அனிருத், சுகன்னியா, ஸ்ரீசா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சியொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM