இலங்கை இரா­ணு­வத்­துக்கு இந்­தி­யாவில் புகையிரதத்துறையில் பயிற்சி

Published By: Digital Desk 3

08 Nov, 2019 | 11:45 AM
image

(இரா.செல்­வ­ராஜா)

 இலங்கை இரா­ணு­வத்­தினர் இந்­தி­யாவுக்கு சென்று ரயில்வே துறையில்  பயிற்­சி ­பெ­று­வ­தற்­கான அனு­ம­தியை பாது­காப்பு அமைச்சு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அத­ன­டிப்­ப­டையில் முதல் கட்­ட­மாக 30 பேர் பயிற்­சிக்­காக இந்­தியா செல்­ல­வுள்­ள­த­ாகவும்  போக்­கு­வ­ரத்து இரா­ஜாங்க அமைச்சர் அசோக் அபே­சிங்க தெரி­வித்தார்.

 இது ­கு­றித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது; 

இரா­ணு­வத்­தி­லி­ருந்து  இவ்­வாறு ரயில்வே துறை பயிற்­சிக்­காக இந்­தியா செல்­ல­வுள்ள 30 பேரில் 10 பேருக்கு ரயில் சாரதி பயிற்­சியும் 10 பேருக்கு சாரதி உத­வி­யாளர் பயிற்­சியும் எஞ்­சிய 10 பேருக்கு ரயில் தொழி­ல்நுட்பம் தொடர்­பான பயிற்­சியும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 

இவ்­வி­த­மாக மூன்று கட்­டங்­களில் 90 பேர் ரயில்வே துறையில் பயிற்­சி­ பெ­ற­வுள்­ளனர். இவ்­வாறு இந்­தியா செல்­ல­வுள்ள  90 பேரால் பயிற்­சியின் பின்னர் ஐம்­பது ரயில்­களை இயக்க முடியும். 

தற்­போது நாளாந்தம் அரச, தனியார் ஊழி­யர்­க­ளுக்­காக 40 ரயில் சேவைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. ரயில்வே ஊழி­யர்கள் வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டா­லும்­கூட  இவர்­களால் ஐம்­பது ரயில்­களை இயக்க முடியும்.  எதிர்­கா­லத்தில் இந்­தியா, சீனா ஆகிய நாடு­க­ளுடன்  பேச்­சு­வார்த்­தை­களை  நடத்தி முப்­ப­டை­களைச் சேர்ந்­த­வர்­களை குறித்த நாடு­க­ளுக்கு அனுப்பி ரயில்வே துறையில் பயிற்­சி­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27