(இரா.செல்வராஜா)
இலங்கை இராணுவத்தினர் இந்தியாவுக்கு சென்று ரயில்வே துறையில் பயிற்சி பெறுவதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளதாகவும் அதனடிப்படையில் முதல் கட்டமாக 30 பேர் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
இராணுவத்திலிருந்து இவ்வாறு ரயில்வே துறை பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ள 30 பேரில் 10 பேருக்கு ரயில் சாரதி பயிற்சியும் 10 பேருக்கு சாரதி உதவியாளர் பயிற்சியும் எஞ்சிய 10 பேருக்கு ரயில் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
இவ்விதமாக மூன்று கட்டங்களில் 90 பேர் ரயில்வே துறையில் பயிற்சி பெறவுள்ளனர். இவ்வாறு இந்தியா செல்லவுள்ள 90 பேரால் பயிற்சியின் பின்னர் ஐம்பது ரயில்களை இயக்க முடியும்.
தற்போது நாளாந்தம் அரச, தனியார் ஊழியர்களுக்காக 40 ரயில் சேவைகள் நடத்தப்படுகின்றன. ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும்கூட இவர்களால் ஐம்பது ரயில்களை இயக்க முடியும். எதிர்காலத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி முப்படைகளைச் சேர்ந்தவர்களை குறித்த நாடுகளுக்கு அனுப்பி ரயில்வே துறையில் பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM