தலைமுடியை துண்டித்து பெண் மேயரை வீதியில் இழுத்துச்சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிவியாவில் தேர்தலிற்கு பின்னர் தொடர்கின்றது வன்முறை

08 Nov, 2019 | 11:30 AM
image

பொலிவியாவில்  பெண்மேயரின் தலைமுடியை கத்தரித்து அவரது உடலில் வர்ணம்பூசி வீதியால் ஆர்ப்பாட்டக்காரர்கள் இழுத்துசென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிவியாவில்  இடம்பெற்ற தேர்தலின் பின்னர் அந்த நாட்டில் மோசமான வன்முறை மூண்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வின்டோ நகரில் பாலமொன்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவேளை அவர்களின் இரு ஆதரவாளர்கள் அரச தரப்பினரால் கொல்லப்பட்டுள்ளனர் என வதந்திபரவியுள்ளது.

இதனை தொடர்ந்து வின்டோ நகரில் மாநாகரசபையின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த  கும்பலொன்று மாநகரமேயர் பட்ரீசியா ஆர்சினை வீதியில் இழுத்துச்சென்றதுடன் மாநாகரசபையின் தலைமை அலுவலகத்தை தீயிட்டுக்கொழுத்தியுள்ளது  என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

மேயர் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றார் என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை இழுத்துச்சென்று பாலத்தில் நிற்கவைத்துதலைமுடியை துண்டித்துள்ளனர்.

மேயர்தலைமுடி துண்டிக்கப்பட்ட உடல் முழுவதும் பெயின்ட் பூசப்பட்ட நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள்வெளியாகியுள்ளன.

அவரை வெறுங்காலுடன்  இழுத்துச்சென்றார்கள் பின்னர் காவல்துறையினர் அவரைமீட்டனர்என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி இவா மோரலெஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேயர் தனது கொள்கைகளையும் வறியவர்களின்  நலன்களையும் பாதுகாத்தமைக்காக ஈவிரக்கமற்ற முறையில்  நடத்தப்பட்டுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலிவியாவின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவது  24 மணித்தியாலங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட தருணம் முதல் அந்த நாட்டில் வன்முறை மூண்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி இவா  மொரெலெஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன- தற்போதையஜனாதிபதி பத்து வீத வாக்குகளால் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது.

எனினும் எதிர்கட்சியினர் இதனை ஏற்க மறுத்துவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25