வாக்­கு­ரி­மையை சமூக நலன்­க­ருதிப் பயன்­ப­டுத்­துவோம்

Published By: R. Kalaichelvan

08 Nov, 2019 | 10:43 AM
image

அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. 

நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளவர் நிச்­சயம் ஒரு பௌத்த சிங்­கள வரா­க­வே­யி­ருப்பார். அதில் மாற்­ற­மி­ருக்­காது. குறித்த தேர்­தலில் பலர் போட்டி யிட்­டாலும் இரு­வ­ருக்­கி­டை­யே­யா­கவே போட்டி நில­வு­கின்­றது. நாட்டின் சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ரெ­வரும் தெரி­வாகும் வாய்ப்பு அற்­ற­போது சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ரான நாம் ஏன் இத்­தேர்­தலில் அக்­கறை செலுத்­த­வேண்டும் என்ற வினா எழலாம்.

குறித்த ஜனா­தி­பதிப் பதவி நாட்டைப் பொறுத்­த­வரை சக்தி வாய்ந்­தது. சகல சமூ­கத்­தி­ன­ரையும் அணைத்து, இணைத்துச் செல்ல வேண்­டிய பொறுப்பு வாய்ந்­தது. இவ்­வா­றான ஒரு பத­விக்குத் தெரி­வா­னவர் பொறுப்­புடன் தனது ஆட்­சி­ய­தி­கா­ரத்தைச் செயற்­ப­டுத்­து­ப­வ­ராக இருக்­க­வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையே பூசல், பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­ப­வ­ராக இருக்­கக்­கூ­டாது என்ற நியா­ய­மான சிந்­த­னை­யுடன் செயற்­பட வேண்­டி­யது நாட்டு மக்­களின், குறிப்­பாக அடிக்­கடி பாதிப்­புக்­குள்­ளாகும் சிறு­பான்­மை­யி­னரின் பொறுப்­பாகும்.

அதனால் அவ்­வா­றா­னவர் எவர் என்­பதை அடை­யாளம் கண்­டு­கொள்ள வேண்­டி­யது நமது பொறுப்பு. சிறு­பான்­மை­யி­ன­ராக நாமி­ருந்­த­போ­திலும் தெரிவைத் தீர்­மா­னிக்கும் சக்தி நமக்­குள்­ளது என்­பதை கடந்­த­கால ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் நிரூ­பித்­துள்­ளன.

நாட்­டிலே சகல இனக்­கு­டி­மக்­களும் நாடாளும் ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்யும் சமத்­துவ அதி­காரம் கொண்ட ஒரு நாளாக ஜனா­தி­பதித் தேர்தல் தினம் அமை­கின்­றது. வாக்­குச்­சீட்டின் பெறு­ம­தியை, அதற்­கு­ரி­ய­வரின் அதி­கா­ரத்தை, சக்­தியை வெளிப்­ப­டுத்தும் நாளாக அந்நாள் உள்­ளது.

இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து அதா­வது ஆங்­கி­லேயர் ஆட்­சி­யி­லி­ருந்து, நாட்டின் சுதே­சிய பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கு ஆட்சி கைமாறி எழு­பத்­தி­யொரு ஆண்­டுகள் நிறை­வு­பெற்­றுள்ள இந்­நி­லையில் இந்­நாட்டின் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள் சுதந்­திரக் காற்றை முழு­மை­யாகச் சுவா­சிக்கும் நிலையில் இல்லை என்ற கசப்­பான உண்­மையை மறுக்­கவோ, மறைக்­கவோ முடி­யாது.

இந்­திய வம்­சா­வளித் தமிழ் மக்­களின் குடி­யு­ரிமை, வாக்­கு­ரிமை என்­பன பறிக்­கப்­பட்டு அவர்கள் நாடற்­ற­வர்­க­ளாக்­கப்­பட்­டனர். எந்­த­வொரு தேர்­த­லிலும் வாக்­க­ளிக்கும் உரிமை பறிக்­கப்­பட்­டது. அது மட்­டு­மல்ல மேலும் பல அடிப்­படை உரி­மை­களும் பறிக்­கப்­பட்­டன. இறு­தியில் குறித்த இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்­களில் ஆறு இலட்சம் பேர் இரு நாடு­க­ளாலும் 1964 ஆம் ஆண்டில் செய்து கொள்­ளப்­பட்ட ஸ்ரீமாவோ ––சாஸ்­திரி ஆட்­க­டத்தல் அல்­லது நாடு கடத்தல் என்று குறிப்­பி­டக்­கூ­டிய மனித ஏற்­று­மதி ஒப்­பந்­தத்தின் மூலம் இந்­தி­யா­வுக்கு நாடு கடத்­தப்­பட்­டனர். எஞ்­சி­ய­வர்கள் நாட்டின் குடி­மக்­க­ளாக ஏற்­கப்­பட்­டனர். ஆனால் நாட்டின் ஏனைய சமூ­கங்கள் குறிப்­பாக பெரும்­பான்மைச் சமூ­கங்கள் அனு­ப­விக்கும் அடிப்­படை உரி­மை­களை அனு­ப­விக்க முடி­யாத கட்­டுப்­பா­டு­க­ளு­ட­னேயே வாழும் நிலை­யி­லுள்­ளனர்.

இலங்­கையின் முத­லா­வது பாரா­ளு­மன்றப் பொதுத்­தேர்­தலில் மலை­ய­கத்­தி­லி­ருந்து பத்துப் பிர­தி­நி­தி­களை இந்­திய வம்­சா­வளித் தமிழ் மக்கள் தெரிவு செய்­யக்­கூ­டி­ய­தாகத் தேர்தல் தொகு­திகள் வரை­யறை செய்­யப்­பட்­டி­ருந்­தன. இருப்­பினும் தமிழர் மத்­தி­யிலே நில­விய போட்­டியால் எட்­டுப்­பேரே தெரிவு செய்­யப்­பட்­டனர். அப்­புத்­தளை மற்றும் பலாங்­கொடை இரட்டை அங்­கத்­தவர் தொகு­தி­களில் ஒவ்­வொன்­றிலும் நான்கு தமி­ழர்கள் வாக்­கு­களைப் பிரித்­ததால் தமிழர் வாக்­கு­களை விடவும் குறை­வான வாக்­கு­களைப் பெற்ற சிங்­க­ளவர் இருவர் தெரிவு செய்­யப்­பட்­டனர். பாரா­ளு­மன்­றத்­திற்கு மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட 95 உறுப்­பி­னர்­களில் 10 பேர் மலை­ய­கத்­தி­லி­ருந்து தமி­ழர்கள் தெரிவு செய்­யப்­ப­டக்­கூ­டி­ய­தாக அன்று இருந்­தது. இன்று 225 பேரில் 8 பேர் மட்­டுமே தட்­டுத்­த­டு­மாறித் தெரி­வா­கி­யுள்­ளனர். தமி­ழர்கள் இந்­தி­யா­வுக்கு நாடு கடத்­தப்­ப­டாது முழு உரி­மை­யுடன் இருந்­தி­ருந்தால் நிலை­மையில் மாற்­ற­மி­ருந்­தி­ருக்கும்.

எது எவ்­வா­றி­ருந்த போதிலும் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் நாமும் வாக்­க­ளிக்கத் தகைமை பெற்­றுள்ளோம். அந்தப் பெறு­ம­தி­வாய்ந்த வாக்கை நாம் எப்­படிப் பயன்­ப­டுத்­தப்­போ­கின்றோம் என்­பதில் சிந்­தித்துச் செயற்­ப­ட­வேண்டும். நமது அர­சியல் தலை­வர்கள் என்போர் பிள­வு­பட்ட நிலையில், ஒவ்­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களை ஆத­ரிக்­கின்­றனர். அவர்கள் தாம் அண்டி நடக்கும் அர­சி­யல்­வாதி அதா­வது வேட்­பா­ளரின் வெற்­றியின் பின்னர் அவ­ரது ஆட்­சியில் அமைச்சர் பத­வி­களைப் பெறலாம் என்ற நோக்­கமும் அடங்கும். அர­சி­யல்­வா­தி­களைப் பொறுத்­த­வரை அதில் தவ­றில்லை.

ஆனால் வாக்­க­ளிக்கும் தமிழ் மக்கள் சிந்­திக்க வேண்­டிய விட­யங்கள் பல­வுள்­ளன. தம்மை இந்­நாட்டின் உரி­மை­யுள்ள மக்­க­ளாக யார் மதித்து ஏற்று நடப்­பார்கள் என்­பது முதன்­மை­யா­ன­தாகும். பொது­வாக நோக்­கும்­போது இது கால­வரை சிறு­பான்மை மக்கள் குறிப்­பாகத் தமிழ் மக்கள் எவ­ருக்கோ வாக்­க­ளிக்கும் இயந்­தி­ரங்­க­ளாக மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அடிப்­படை வாழ்­வு­ரி­மைகள் மதிக்­கப்­ப­ட­வில்லை.

மலை­யகத் தமிழ் மக்கள் குறிப்­பாகப் பெருந்­தோட்­டத்­துறை சார் மக்கள் உழைப்­புக்­கேற்ற ஊதியம் பெற­மு­டி­யாத நிலை­யி­லுள்­ளனர். ஆயிரம் ரூபா சம்­பளம் கேட்­டார்கள். அது கிடைக்­க­வில்லை. ஐம்­பது ரூபா பெற்றுக் கொடுப்போ மென்­றார்கள் அதுவும் இல்லை. தீபா­வளி முற்­ப­ண­மாக மேலும் ஐயா­யிரம் பெற்றுக் கொடுப்­போ­மென்­றார்கள் அதுவும் இல்லை. இப்­போது தமக்கு வாக்­க­ளித்தால் நாட் சம்­பளம் ஆயிரம் ரூபா தரு­வ­தாக ஒரு­வரும் சொல்­ல­வில்லை. நான் ஆயி­ரத்து ஐநூறு ரூபா தருவேன் என்று ஒருவர் சொல்­கிறார். தோட்டத் தொழி­லா­ளரைப் பலரும் குழப்­பு­கின்­றனர். காலம்தான் பதில்­சொல்ல வேண்டும்.

வீட்­டு­ரிமை, காணி­யு­ரிமை, கல்­வி­யு­ரிமை, தொழில்­உ­ரிமை, பாது­காப்பு உரிமை என்று பல உரி­மை­களைப் பெற­வேண்­டிய நிலை­யி­லுள்ள தமி­ழர்கள், குறிப்­பாக மலை­யகப் பெருந்­தோட்டத் தமி­ழர்கள் ஏதோ ஒரு நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளிக்­கின்­றனர். எதிர்­கா­லத்­தி­லா­வது வழங்­கப்­படும் வாக்­கு­று­திகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­து­வது ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களை ஆத­ரிக்கும் தமிழர் தரப்பின் தவிர்க்க முடி­யாத பொறுப்­பாகும். தமிழ் அர­சி­யல்­வா­திகள் தமி­ழர்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொ­டுக்கும் தர­கர்­க­ளாக மட்டும் இருந்து விடக்­கூ­டாது.

வாக்­கு­ரிமை என்­பது நாட்டின் குடி­மக்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் அடிப்படை உரிமை. அதைப் பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பு. வாக்குக்காக மட்டும் நம்மை நாடி வராது உண்மையான நேர்மையான எண்ணத்துடன் நமது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்று ஒருவரை நாம் அடையாளம் காண்கின்றோமோ அவருக்கு– அவரது சின்னத்திற்கு நமது வாக்கை அளிக்கவேண்டும். இருந்திருந்து ஒரு நாள் நாட்டின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் –வாக்களிக்கும் வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்தி நமது சக்தியை வெளிப்படுத்தவேண்டும்.

பணத்திற்கும், மதுவுக்கும், மிரட்டல்களுக்கும் அடிபணியாது மனச்சாட்சியின் படியும் கடந்தகால வரலாற்றை ஆராய்ந்தும், சிந்தித்தும் நமது பெறுமதியான வாக்கைச் சரியான முறையில் அளிப்போம். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்பபோம்.

த.மனோகரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04