வெள்ளத்திலும் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை சீர்குலைக்க தீய சக்திகள் முயற்சிக்கின்றது என நேற்று சபையில் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமாத நீர், மின்சார பட்டியல்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான விசேட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே முஜிபுர் ரஹ்மான் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க உலகின் எந்தவொரு நாட்டிலும் முடியாத காரணமாகவே உள்ளது. ஆனால் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்பதாக முன்னேறிவிப்புக்களை விடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். அவ்வாறான முன்னேற்பாடான திட்டங்களுக்கு நம் செல்ல வேண்டும்.
தற்போது, வெள்ளம் வழிந்தோட ஆரம்பித்துள்ள நிலையில் மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அரசாங்கம் திருப்திகரமான நிலையில் நிவாரணங்களை வழங்கியது.
அதேவேளை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம் மாதத்திற்கான மின், நீர் கட்டனத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM