(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு தாய் பிள்ளைகளாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 71 வீத வாக்கினைப் பெற்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தையும், மேலதிக தீபாவளி முற்பணத்தை பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம், 1500 ரூபா நாளாந்த சம்பத்தைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றஞ்சுமத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோகாலை மாவட்மத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் ,
சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கிறது.
இவ்விரு கட்சிகளும் ஒரு தாய் மக்களாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்க்கட்சி பலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மிடம் வழங்கினார்.
சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க தீர்மானித்தது. எதிர்கட்சியில் இருந்து கொண்டு கட்சியொன்றை உருவாக்கினோம். அந்த கட்சியூடாக போட்டியிட்டு உள்ளுராட்சி தேரதலில் நூற்றுக்கு 71 வீதத்தில் வெற்றி பெற்றோம்.
உள்ளுராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன , சுதந்திர கட்சி தனித்தனியே போட்டியிட்டது. அதே எல்பிட்டி தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டோம்.
எனினும் இருகட்சிகளினதும் முடிவை இணைத்த போது 70 வீத வாக்கினைப் பெற்று பாரிய வெற்றி பெற்றுள்ளோம். எனவே இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் இந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM