வன்னி தேர்தல் தொகுதியில் 95வீதமான தபால் மூல வாக்கு பதிவு ; அரச அதிபர்

Published By: Digital Desk 4

07 Nov, 2019 | 04:54 PM
image

வன்னி தேர்தல் தொகுதியில் 95.25வீதமான அஞ்சல் வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஐ.எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

இன்று தபால் மூல வாக்களிப்பின் இறுதி நாள் வாக்களிப்புக்களின்  பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா,  முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட தபால் மூல வாக்குகள் 12184, ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் 10994, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1190 , இதுவரை வாக்களிக்கப்பட்ட தபால் வாக்குகள் 10472  இந்த அடிப்படையில் 95.25வீதமான மக்கள்  இதுவரை வாக்களித்திருக்கிறார்கள்.

வவுனியா மாவட்டத்தில் இதுவரை தேர்தல் முறைப்பாடுகளாக 36 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று ஒவ்வொரு முறைப்பாடுகளுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்பொழுது எல்லா முறைப்பாடுகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்