பாகிஸ்தானின் கர்தார்பூர் வழித்தடம் நாளை மறுதினம் திறக்கப்படும் நிலையில் இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு கடவுச்சீட்ட தேவையில்லை என அந் நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் அதனை ஏற்க மறுத்த பாகிஸதான் இராணுவம், இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் கடவுச்சீட்டு கொண்டு வர வேண்டும் திடீர் அறிவிப்பு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.
இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை மறுதினம் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் சீக்கிய பக்தர்களுக்கு முதல் நாள் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது, கடவுச்சீட்டு தேவையில்லை, 10 நாட்களுக்கு முன்பு பதிவு செய்தால் போதும் என இம்ரான் கான் அறிவித்தார்.
எனினும் அதனை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துள்ளது. இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் கடவுச்சீட்டு கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் இராணுவ திடீர் அறிவிப்பு செய்துள்ளது.
இதையடுத்து கடவுச்சீட்டு தேவையா என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM