(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ முழுமையான இலங்கை பிரஜையும் இல்லை, முழுமையான அமெரிக்க பிரஜையும் இல்லை. அவ்வாறான ஒருவர் தேர்தலில் போட்டியிடவே முடியாது என ஆளும் தரப்பு சபையில் கூற கோததாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை என்ற தீர்ப்பை நீதிமன்றமே வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சி கூறியது.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள 13 கோரிக்கைகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் டி.பி ஹேரத், கோத்தாபய ராஜபக்ஷவே தேசிய தலைவர். மூவின மக்களையும் இணைத்து நாட்டினை ஐக்கியப்படுத்த முன்வந்துள்ள ஒரே வேட்பாளர் அவர்தான். இந்த நாட்டில் மோசமான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டில் தேசிய ஒற்றுமையையும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் உருவாக்கினார்.
ஆனால் இன்று எதிரணியில் உள்ளவர்கள் நாட்டினை பிரிக்கும் நடவடிக்கையை எடுக்கின்றனர். அதுமட்டும் அல்லாது கோத்தாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை மீதான கேள்வியை எழுப்பி அவரை ஓரங்கட்ட முயற்சி எடுக்கின்றனர் என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஆளும் தரப்பு உறுப்பினர் அமைச்சர் அஜித் பி.பெரேரா :- கோத்தாபய ராஜபக்ஷ முழுமையாக இலங்கை பிரஜை அல்ல, அதேபோல் முழுமையான அமெரிக்க பிரஜையும் அல்ல. இலங்கையில் முறையாக பிரஜாவுரிமையை பெறவும் இல்லை, அதேபோல் அமெரிக்காவின் பிரஜாவுரிமையை முறையாக பெறவும் இல்லை. அவ்வாறான ஒருவரை எவ்வாறு மக்கள் அங்கீகரிக்க முடியும். உங்களின் வேட்பாளர் அங்கீகாரம் இல்லாதவர் என்றார்.
இதற்கு பதில் தெரிவித்த ஹேரம் எம்.பி:- உங்களின் கேள்விக்கு நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றம் அவரை அங்கீகரித்துவிட்டது என்றார்.
மீண்டும் கேள்வி எழுப்பிய அமைச்சர் அஜித் பி.பெரேரா :- நீதிமன்றம் அவ்வாறு கூறவில்லை.
சட்டரீதியற்ற பிரஜாவுரிமை குறித்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்றே நீதிமன்றம் கூறியது. விடயம் விளங்காது இவர்கள் பேசுகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM