ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் 16ஆம் திகதியன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுநாட் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினரும் ஹாலி எல தொகுதி ஐ.தே.க அமைப்பாளருமான ஜயந்த கன்னங்கர கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
வாக்கெடுப்பு நிலையம் அமைந்துள்ள தூரத்திற்கு ஏற்ப அரை நாள் அல்லது அதற்கு கூடுதலான நேரமோ தமது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் போது ஊவா மாகாணத்தில் வாக்களிப்பில் ஈடுபட்டுவிட்டு தொழிலுக்கு சென்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அரைநாளுக்குரிய சம்பளத்தை சில கம்பனிகள் வழங்கியிருந்தன. இதனால் அவர்களது தொழில் உரிமை மற்றும் வருமானம் என்பன பாதிக்கப்பட்டன.
எனவே எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களின் வாக்களிப்பின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM