(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு மாவட்டம் ஐக்கியதேசிய கட்சிக்கு உரித்துடையது என்ற பாரம்பரியம் இம்முறை மாற்றியமைக்கப்படும். தலைநகரின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றி பலமான ஆட்சியமைக்கும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை எவரும் பாதுகாக்க வேண்டிய தேவை கிடையாது. எம்முடன் இணைந்துள்ள கட்சிகளின் தனித்துவத்திற்கு எந்நிலையிலும் பாதிப்பு ஏற்படாது என பொது ஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ் வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கொழும்பு வாழ் மற்றும் மக்களின் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை. ஜனாதிபதியாக கோத்தபாய ராஜ பக் ஷ தெரிவு செய்யப்பட்டவுடன் வீடற்றவர்களுக்கு தரமான வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும்
நல்லாட்சி அரசாங்கத்தில் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கப்பட்டமையினால் குடும்ப பெண்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நுண்கடன் வசதிகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். கொழும்பில் மாத் திரம் 1500ற்கும் அதிகமான சிறுகுடில் பகுதி கள் காணப்படுகின்றன. இப்பிரதேசங்க ளில் அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ குடியிருப்பு பிரச்சினைகளை பிரசாரமாக்கினாரே தவிர தீர்வு காணவில்லை. பொதுஜன பெரமுனவின் தலைமையிலான அரசாங்கத்தில் தரமான வீடுகள் அனைவருக்கும் பெற்றுக் கொடுக்கப்படும். கடன்சுமையில் சிக்குண்டுள்ள பெண்கள் அனைவரும் கடன் சுமைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். பெண்கள் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு செல்லாமல் சுய தொழில் ஊடாக முன்னேற்றமடையும் திட்டங்களை செயற்படுத்து வோம்.
பொதுஜன பெரமுன தனித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. அனைத்து கட்சிகளின் ஆதரவுடனே போட்டியிடுகின் றோம். எம்முடன் இணைந்துக் கொண்டுள்ளவர்கள் அனைவரையும் பொதுவாகவே மதிப்பிடுவோம். சுதந்திர கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் எமக்கு கிடையாது. சுதந்திர கட்சியை நாங்கள் பாதுகாப்போம்.
2015 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களினாலேயே பொதுஜன பெரமுனவை தோற்றுவித்து இன்று அரசியலில் பலமாக உள்ளோம். இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிரான செயற்பாடு அல்ல.
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்திற்கு உரியது என்று குறிப்பிடப்படுகின்றது. இது வரலாற்று ரீதியி லான உண்மை ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்டத்தின் அனைத்து தேர் தல் தொகுதிகளையும் கைப்பற்றி தலை நகரினையும் கைப்பற்றும் என்பதை உறுதியுடன் குறிப்பிட்டுக்கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM