கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காய்ச்சல், வயிற்றோட்டம், வாந்தி என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மாவட்ட வைத்தியசாலையில் அதிகளவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், முக்கியமாக இதன் தாக்கத்துக்கு அதிகளவு சிறுவர்கள் உள்ளாகியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதனால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வழமைக்கு மாறாக அதிகளவான நோயாளர்கள் நாளாந்தம் சிகிச்சைக்கு வருவதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தின் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதோடு, ஈக்களின் பெருக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக பேணுவதோடு, நன்கு சுட்டாறிய நீரை குடிப்பதற்கு பயன்படுத்துமாறும், சிறுவர்கள் மலசல கூடத்திற்கு சென்று வந்த பின்னர் கைகளை நன்றாக சவர்க்காரம் கொண்டு கழுவுமாறும் சுகாதார துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM