மண்சரிவு அபாயம் : 72 பேர் வெளியேற்றம்.!

Published By: Robert

26 May, 2016 | 11:00 AM
image

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெட்டபுலா போகீல் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்பொழுது கெட்டபுலா பாரண்டா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இத்தோட்டத்தில் 18ம் இலக்க குடியிருப்பு தொகுதியின் பின்பகுதியில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழ கூடிய நிலை காணப்படுவதாகவும், ஏற்கனவே பாரியலவிலான கற்பாறைகள் அப்பகுதியை நோக்கி வந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட இவர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட இவர்களில் 19 சிறுவர்களும், குழந்தைகளும் அடங்குகின்றனர்.

இவர்களுக்கு நிவாரண உதவிகள் பலராலும் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் தங்கி இருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதோடு சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். மேலும் அதிகமான பெண்கள் தங்கியிருப்பதனால் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத அளவிற்கு பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்ட இவர்கள் அங்கலாகின்றனர்.

தங்களை தற்காலிகமாக இடம்பெயர செய்திருந்தாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வீடுகளை அமைத்து கொடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிகின்றனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27