மதுபோதையில் இரு தொழிலாளர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மோதலாகியதும் ஒருவர் கத்திக்குத்திற்கிலக்காகி உயிரிழந்த சம்பவமொன்று வெலிமடைப் பகுதியின் டவுன்சைட் பெருந்தோட்டப் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது.
இக் கத்திக்குத்தினை மேற்கொண்ட நபர் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த கத்தியுடன்ர வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கத்திக்குத்தில் மரணமானவரின் சடலம் வெலிமடை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி இரு தொழிலாளர்களுக்கிடையில் நீண்ட காலமாக இருந்து வந்த பகைமை மதுபோதையில் வெளிக்கொணரப்பட்டு இச் சம்பவம் இடம்பெற்றிருப்பமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்தள்ளது.
இம் மரணம் கொலையென ஊர்ஜிதமாகியிருப்பதால் கொலைக்குற்றவாளி விசாரணையின் பின்னர் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று வெலிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM