இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக ஆரம்பித்துள்ள இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது, இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து அணி 21 ஓட்டத்தினால் வெற்றிபெற்று தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியிருந்தது.
இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் நெல்சனில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை குவித்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் கிராண்ட்ஹோம் 55 ஓட்டங்களையும், மார்டின் குப்டீல் 33 ஓட்டங்களையும் அதிகபடியக பெற்றனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டோம் கர்ரன் 2 விக்கெட்டுக்களையும், சாம் கர்ரன், சஹிப் மொஹமட், பேட்ரிக் பிரவ்ன் மெத்தியூ பெர்கின்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கயைும் வீழ்த்தினர்.
இதன் பின்னர் 181 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவிலை 7 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 14 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
டேவிட் மலன் 55 ஓட்டத்தையும், ஜேம்ஸ் வீன்ஸ் 49 ஓட்டத்தையும் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபடியாக பெற, லொக்கி பெர்குசன், பிளேர் டிக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மிட்செல் சாண்டனர், இஷ் சோதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக நியூஸிலாந்து அணியின் கிராட்ண்ஹோம் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் நியூஸிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM