முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு இன்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.
இம் மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்மாநாட்டில் சுதந்திர கட்சியின் நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படும். சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் பிரதான நோக்கமாக இழக்கப்பட்டுள்ள அரச அந்தஸ்த்தினை மீண்டும் எவ்வாறு கைப்பற்றுவது என்பது காணப்படுகின்றது.
இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுதந்திர கட்சியி அறிவித்துள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்ரிகா பண்டாரநாயக்க புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக ஆதரவு தெரிவித்துள்ளமை குறித்தும் இன்று கூடவுள்ளசுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM