வவுனியா நகரசபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் நகரசபை செயலாளரின் பதவி பொறிக்கப்பட்ட முத்திரையின் மூலம் முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக நகரசபை தலைவரிடம் கேட்டபோது,
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நகரசபையின் றம்பைக்குளம் வட்டாரத்தின் உறுப்பினர் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வந்திருந்தது, அந்த முறைப்பாடு தொடர்பாக எந்த ஒரு ஆதாரமும் எமக்கு கிடைக்கவில்லை. இதேவளை போலியான ஆவணம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையும் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றது.
குறித்த ஆவணத்தினை நாம் சோதித்து பார்த்தபோது அது போலியானது என்பது தெரிய வந்தது. அதற்கமைய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளோம். குறித்த தமிழரசு கட்சியின் உறுப்பினர் இவ்வாறான மோசடியான நடவடிக்கையில் ஈடுபட்டதை பொலிஸ் நிலையத்தில் ஒத்துக்கொண்டார். அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார்.நகரசபையின் கௌரவத்தை அவர் அவமதித்தமைக்கு தலைவர் என்ற ரீதியில் வருத்தப்படுகின்றேன்.
இது சபையின் ஊழியர்கள் உறுப்பினர்களிற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொறுப்புடன் செயல்பட வேண்டிய உறுப்பினரின் இச்செயற்பாடு மக்கள் மத்தியில் அவமரியாதையை ஏற்படுத்துகின்றது.
இதேவளை இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் கடுமையான எச்சரிக்கையும், பொதுமனிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் மீது இனியும் ஒரு முறைப்பாடு வரும் பட்சத்தில் கடுமையான சட்டத்தினூடாக தண்டிக்கப்படுவார் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM