(நா.தனுஜா)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் என்பன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன.
இந்த சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான கலந்துரையாடல்களே இதன்போது இடம்பெற்றன.
தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.
தமிழரசு கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் ஆதரவின் முக்கியத்துவம் குறித்து தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
தமது கட்சிகளின் நிலைப்பாட்டை நாளை அறிவிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM