ஆசிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர் பான பிரச்சினையை முறியடிக்க தாம் நிலக்கரிக்கு அடிமையாவதிலிருந்து விடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி எச்சரிக்கையை விடுத் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய பிராந்தியமானது காலநிலை மாற்றத்திற்குக் காரணமான பூகோள வெப்பமாதலால் மிகவும் பாதிக்கப்படும் பிராந்தியங்கள் மத்தியில் உள்ளதாக தெரிவித்த அவர், அதனால் அந்தப் பிராந்தியம் காலநிலை மாற் றப் பிரச்சினையை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் முன்வரிசையில் நிற்கவேண்டியுள்ளதாக கூறினார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ள அனர்த்த அபாயத்தை ஆசிய நாடுகள் எதிர்கொண்டுள்ளமை புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் காரணமாக 2050 ஆண்டுக்குள் கடற்கரையோரமாக வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் அண்மையில் வெளியான காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி குறிப்பிட்டார். சீனா, பங்களாதேஷ், இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 ஆசிய நாடுகள் நிலக்கரி பயன்பாட்டால் வெளிப்படும் பச்சை இல்ல வாயுக்களால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் கரை யோர வெள்ளப்பெருக்கு அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல ஆசிய நாடுகளில் நிலக்கரி பிரதான சக்தி வளமாக உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM