(எம்.மனோசித்ரா)
மிலேனியம் சவால் ஒப்பந்தம் பற்றிய நிலைப்பாட்டை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ இதுவரையில் வெளிப்படுத்தாதது ஏன் என்று கேள்வியெழுப்பிய ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாட்டின் மீது பொறுப்பு இருக்கிறது என்றால் விரைவில் அவரது தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
தற்போது மிலேனியம் சவால் (எம்.சி.சி) ஒப்பந்தம் பெருமளவில் பேசப்படுகிறது. எனினும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அதன் பின்னர் சர்வதேசத்துடன் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் செய்து கொள்ளப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து ஆராயப்படும் என்றும் சஜித் தெளிவாக கூறியிருக்கிறார்.
இவ்வாறான சர்வதேச ஒப்பந்தங்கள் நாட்டுக்கு ஏற்புடையவையா என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டிய தேவை சஜித் பிரேமதாசவுக்கு இருக்கிறது. எனவே நாட்டுக்கோ , மக்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் சஜித் கையெழுத்திட மாட்டார்.
எம்.சி.சி ஒப்பந்தத்தை புறக்கணிப்பேன் என்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலாவது தெரிவித்திருக்கிறாரா? விமல் வீரவன்ச போன்றவர்கள் மூலம் எம்.சி.சி ஒப்பந்தம் பற்றி பேச வைக்கும் கோத்தாபய எந்த சந்தர்ப்பத்திலும் நேரடியாக அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவே நேரடியாக அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். காரணம் அவர் தான் அமெரிக்க பிரஜையாக இருக்கிறார்.
உண்மையில் இலங்கை மீது நேசமும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது என்றால் அவர் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம். இம்மாதம் 17 ஆம் திகதி சஜித் பிரேமதாச தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் சந்தேகம் காணப்படும் விடயங்களை மீண்டும் தெளிவுபடுத்துவார்.
கேள்வி : தேர்தலுக்கு முன்னர் எம்.சி.சி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். இது குறித்து உங்கள் நிலைப்பாடு ?
பதில் : இது வரையில் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை. சில ஊடகங்களில் அவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அது உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல.
கேள்வி : கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , சஜித் ஜனாதிபதியானாலும் நானே பிரதமர் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பில் கட்சி ரீதியில் ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா ?
பதில் : இது பிரதமரை தெரிவு செய்வதற்கான போராட்டம் அல்ல. எனவே ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் பிரதமர் யார் என்பது பற்றி சிந்திக்கலாம். அதற்கு போதிய காலம் இருக்கிறது. அரசியலமைப்பின் படி புதிய ஜனாதிபதி அது குறித்து தீர்மானிப்பார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM