(எம்.மனோசித்ரா)
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. சனிக்கிழமை நண்பகல் வேளையில் குறித்த பெண்கள் இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலவல பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5.2 கிராம் ஹேரோயினை தன்வசம் வைத்திருந்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 44 வயதுடைய தெலவல - கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இதே போன்று அதே பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பிரிதொரு பெண்னொருவரும் 2.6 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரு பெண்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM