தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.
இதன்போது அவர்களது கூட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களை வழிமறித்த பொலிஸார் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு செல்ல விடாததன் காரணத்தினால் வீதியோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 985 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தன் நீங்கள் 2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு உறுதியளித்தீர்கள். இப்போது ஒன்றுபட்ட, ஒருமித்த பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள் நீங்கள் ஏன் தமிழர்களிடம் தொடர்ந்து பொய் சொல்னீர்கள்?
சம்பந்தா தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க நீங்கள் தமிழர்களை கேட்கவில்லை என்றால் நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்த தகுதியற்றவர்கள் சுமந்திரனே பாராளுமன்றத்தில் பௌத்தத்துக்கு முதலிடம் யாரை கேட்டு கொடுத்தாய்?
சம்பந்தா இலங்கை ஒரு பௌத்த நாடு என்று மோடிக்கு சொல்வதற்கு தமிழர்கள் உங்களுக்கு அனுமதி தந்தார்களா? போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM