இங்கிலாந்துடனான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியில் நியூஸிலாந்து அணி 21 ஓட்டங்களினால் வெற்றிபெற்று பதிலடி கொடுத்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக ஆரம்பித்துள்ள இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி வெலிங்டனில் இடம்பெற்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை குவித்தது.
மார்டின் குப்டீல் 41 ஓட்டத்தையும், ஜேம்ஸ் நீஷம் 42 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சாம் கர்ரன் 2 விக்கெட்டுக்களையும், கிறிஸ் ஜோர்தன் 3 விக்கெட்டுக்களையும், அடில் ரஷித், லிவிஸ் கிரிகோரி மற்றும் சஹிப் மொஹமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன் பின்னர் 179 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 21 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் மலன் 39 ஓட்டத்தையும், இயன் மோர்கன் 32 ஓட்டத்தையும், கிறிஸ் ஜோர்தன் 36 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் மிட்செல் சாண்டனர் 3 விக்கெட்டுக்களையும், இஷ் சோதி, டீம் சவுதி, லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், டார்லி மிட்செல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின்மூலம் நியூஸிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக மிட்செல் சாண்டனர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், இவ்விரு அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 தொடரின் மூன்றாவது போட்டி நாளைமறுதினம் நெல்சனில் ஆரம்பமாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM