(நா.தனுஜா)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீடமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருக்கும் அதேவேளை, அவற்றில் வட,கிழக்கு மாகாண அரசியல் தலைவர்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினமும், இன்றைய தினமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர், தனது விஜயத்தின் போது மக்கள் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் தீர்மானித்திருக்கிறார்.
நேற்று சனிக்கிழமை வவுனியா கலாசார மத்திய நிலையத்தில் வர்த்தக சமூகத்தினரையும், இளைஞர் யுவதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் தோப்பூர் பிரதேச சபையை அண்மித்த மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும், மாலை 4 மணிக்கு மன்னார் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
மேலும் நேற்று மாலை 6 மணியளவில் மானிப்பாயில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பொன்றிலும், அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பிலும் பங்குபற்றினார்.
அதேபோன்று இன்றைய தினம் யாழ் நாக விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டள்ளார் பிரதமர் விக்கிரமசிங்க.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM